Monday, April 27, 2015

தேர்வில் வெற்றி பெற்ற மாணவகளுக்கு கலந்தாய்வு இல்லாமல் நேரடிச் சேர்க்கை: முனைவர் செ.வீரஅழகிரி அறிக்கை



ஆதனூர், வேதாரண்யம். ஏப் 27-
ஆதனூர் அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீரஅழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;-

அறிவரசி சமுகநல கல்வி அறக்கட்டளையின் மூலம் நமது பகுதி மாணவ மாணவியர், இளைஞர்கள், அரசு வேலை பெற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் I, II, III IV ஆகிய தேர்வுகளுக்கு மாபெரும் இலவசப் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சுந்தரேச விலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மிக சிறப்பாக நடத்தி வருகிறோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த 05–04-2015 தேதியன்று  சி.க.சுப்பையா அரசு மேனிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, தற்போது சில மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வு எழுதுவதாலும், அரசாங்க ஆய்வக உதவியாளர்கள் (Lap Assistant)  பணி நியமிக்கப்படவுள்ளது. அதற்கு சில மாணவர்கள் ஆயத்தமாவதாலும் மாணவர்களின் நலன் கருதி  இரண்டாமாண்டு பயிற்சி வகுப்பிற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு 07–06–2015 தேதியன்று வகுப்புகள் தொடங்குவதெனவும் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கலந்தாய்வு இல்லாமல் பயிற்சி வகுப்பில் நேரடிச் சேர்க்கை நடைபெறுமெனவும் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் வழி "நிலம் கையக மசோதா"


 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் வழி "நிலம் கையக மசோதா" முனைவர் செ.வீர அழகிரி.

ஆதனூர் வேதாரண்யம் ஏப்- 27;
 நிலம் கையக மசோதாவுக்கு இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வளர்களும் ஏன் பா.ஜ.கவின் தோழமை கட்சிகளிலும் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மக்களின் நலனில் அக்கரை கொண்டு மக்களுக்கான ஆட்சி நடத்தும் மத்திய அரசு, ஏன் விவசாயிகளுக்கு எதிரான விரோதமான செயலை செய்கிறது என்பது புலப்படவில்லை. இந்தியாவிலுள்ள 95% மக்கள் நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏன் யாருக்காக நிறைவெற்ற வேண்டுமென துடிக்கிறது என்பதன் காரணம் தான் புரியவில்லை.

மேலும், மத்திய அரசு விவசாயிகளையே குறிவைத்து தாக்குகிறது. 4% வட்டிக்கு பயிர்கடன் பெற்று வந்த விவசாயிக்கு 7% வட்டியும். வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 9% பயிர்கடனை தற்போது  11 சதவீதமாக உயர்த்தியது வண்மையாக கண்டிக்கத்தக்கது .

மத்திய அரசு, நிலம் கையக மசோதாவை திரும்ப பெறவேண்டும். கைவிடப்பட வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவிலுள்ள அனைத்து விவசாயிகள், விவசாயம் சார்ந்த சாதரண எழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் 1947 க்கு முன் ஆங்கிலய கம்பேனிக்கு அடிமையாக இருந்தது போல வரும் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான். 

1991ஆம் ஆண்டு பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரான பின்னர் 1994 இல் காங்கிரஸ் அரசு “காட் ஒப்பந்தம்’ என்ற அடிமைச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து "நாடு மீண்டும் அடிமையாகிறது” என்ற உண்மையை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் சென்று அரசியல் விழிப்புணர்வூட்ட வேண்டியுள்ளது. 

அமெரிக்காவின் பெப்ஸி கோகோகோலா நிறுவனங்களின் பூச்சி மருந்து குளிர்பானங்கள் நமது நாட்டில் தங்கு தடையில்லாமல் நாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருவதே இதற்கு போதுமான உதாரணமாகும்.
 
இந்த ஆபத்துகளைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது இது காட் ஒப்பந்தம் போலவும், டங்கல் திட்டம் போலவும் அந்நிய முதிலீடு குறித்த முடிவும், அதே போல நிலம் கையக மசோதாவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். 

காட் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சில கோரிக்கைகளைத்தான்  தற்போது மத்திய அரசு நிறைவேற்றுகிறது என நினைக்கிறேன். அரசு உடைமைகள் அனைத்தும் உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாரளமயமாக்கம் என்ற நோக்கில் வரவேண்டும். மீண்டும் இந்தியா அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான்  காட் ஒப்பந்தத்தின் தலையாய நோக்கம் என்றார் ASWET அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீர அழகிரி.

அரசுப் பள்ளியில் ஈரோடு கலெக்டர் மகள்


மிக்க மகிழ்ச்சி! நல்ல முயற்சி!! ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்று, அனைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசு பள்ளியில் தரமான கல்வி , பள்ளிக்குத் தோவையான அடிப்படை வசதி, ஊட்டசத்து மிக்க தூய்மையான உணவு, ஏழைப் பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாது நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். எனவே  மத்திய  மாநில அரசு இதனைக் கருத்தில் கொண்டு அரசுப்பணியில் இருக்கும் பணியாளர்கள் கட்டாயம் அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் அவர்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்ற ஆணைப் பிரப்பிக்க வேண்டுமென அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் செ.வீர அழகிரி தெரிவித்தார்.

https://lh6.googleusercontent.com/-OqYhMcEYR6o/VTyRC_3ZCLI/AAAAAAAAHzI/tcZ3oBcKmhw/w480-h478-no/3.jpg

Wednesday, April 22, 2015

TNPSC Entrence Exam Answer Key







Sunday, April 19, 2015

அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை TNPSC இலவசப் பயிற்சி நுழைவுத் தேர்வு: முதலாம்கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு.

https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEjmcbntNXRr-8QKkd3Zk24SoBuqnGggH0aUsO8KZJejskx3HWBfzMILiEb4Y9fnQX8xDNzY17MoRvHpB5wv0datrRBUKnOddgJ7eMZA-5-Of5Jb4UC_ze5qdnxftbs8uhPbuXNkBP9QnbBpi3pqwEqBBzmb-UqRIwoJlHoIt0-ohYe1nm9FwLGhPwfBs373HGV0gfn4CgEE6fwcSaobQ-rNq5Qh5facuAk=w426-h551

















Saturday, April 18, 2015

தன்னார்வத்தோடு இரத்த தானம் அளிக்க முன் வரவேண்டும்.

மனித நேயம்  படைத்த நல்ல மனமுள்ள இன்றைய இளைய சமூதாயமே வணக்கம்.

அனைவரும் தன்னார்வத்தோடு இரத்த தானம் அளிக்க முன் வரவேண்டும். அதற்கு இரத்தத்தை உடனே தர வேண்டும் என்பதில்லை. உங்கள் பெயரையும் உங்கள் தொடர்பு முகவரி, எண் ஆகியவற்றை நமது அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளையில் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ளுங்கள் பாதிக்கப்பட்டவர்க்கு தேவைப்படும் போது உங்களை தொடர்பு எண்ணில் அழைத்து விவரம் சொல்வோம். பிறகு நீங்கள் நேரில் சென்று இரத்தம் வழங்கலாம். அது மட்டுமின்றி யாருக்கு உங்கள் இரத்தம் செலுத்தப்படுகிறது என்பதையும் அரிய முடியும்.

  • 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
  • இரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
  • நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்.
  • சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லீட்டர் ரத்தம் இருக்கும்.
  • அதில் இருந்து 350 மில்லி லீட்டர் இரத்தம் மட்டுமே இரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
  • தானமாக அளித்த இரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
  • இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
  • இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
  • இரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு இரத்தச் சோகை, இரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் சில வேளைகளில் தேவைப்படலாம்.
  • இரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்தப் போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது.
  • இரத்த தானம் செய்ய விரும்பு பவர்களுக்கு நீரிழிவு நோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தின் மூலம் பரவக் கூடிய நோய்கள் இருக்கக்கூடாது.
  • இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

யாரெல்லாம் இரத்த தானம் அளிக்கக் கூடாது. 

  • கர்ப்பமாக இருப்பவர்கள்
  • சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள,
  • தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்ப வர்கள்,
  • போதைப் பொருள் பழக்கம்
  • வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள். ஆகியோரும் பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்திலும் இரத்ததானம் செய்ய இயலாது.
  • இதய நோய்,
  • சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்,
  • நுரையீரல் பழுதடைந்தவர்கள்,
  • இரத்த அழுத்தம்,
  • ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் அளிக்க இயலாது.
இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.ஆனால் இரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து இரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுகின்றனவா என்பதை மட்டும் நாம் சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Tuesday, April 7, 2015

அறிவரசி சமுகநல கல்வி அறக்கட்டளையின் மூலம் TNPSC I, II, III IV ஆகிய தேர்வுகளுக்கு மாபெரும் இலவச பயிற்சி வகுப்புகள் ( tnpsc free coaching class -vedaranyam)