Saturday, April 18, 2015

தன்னார்வத்தோடு இரத்த தானம் அளிக்க முன் வரவேண்டும்.

மனித நேயம்  படைத்த நல்ல மனமுள்ள இன்றைய இளைய சமூதாயமே வணக்கம்.

அனைவரும் தன்னார்வத்தோடு இரத்த தானம் அளிக்க முன் வரவேண்டும். அதற்கு இரத்தத்தை உடனே தர வேண்டும் என்பதில்லை. உங்கள் பெயரையும் உங்கள் தொடர்பு முகவரி, எண் ஆகியவற்றை நமது அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளையில் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ளுங்கள் பாதிக்கப்பட்டவர்க்கு தேவைப்படும் போது உங்களை தொடர்பு எண்ணில் அழைத்து விவரம் சொல்வோம். பிறகு நீங்கள் நேரில் சென்று இரத்தம் வழங்கலாம். அது மட்டுமின்றி யாருக்கு உங்கள் இரத்தம் செலுத்தப்படுகிறது என்பதையும் அரிய முடியும்.

  • 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாம்.
  • இரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
  • நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
  • 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்.
  • சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லீட்டர் ரத்தம் இருக்கும்.
  • அதில் இருந்து 350 மில்லி லீட்டர் இரத்தம் மட்டுமே இரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
  • தானமாக அளித்த இரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
  • இரத்த தானத்தின் போது நாம் இழக்கும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
  • இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
  • இரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு இரத்தச் சோகை, இரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் சில வேளைகளில் தேவைப்படலாம்.
  • இரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்தப் போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது.
  • இரத்த தானம் செய்ய விரும்பு பவர்களுக்கு நீரிழிவு நோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற இரத்தத்தின் மூலம் பரவக் கூடிய நோய்கள் இருக்கக்கூடாது.
  • இரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

யாரெல்லாம் இரத்த தானம் அளிக்கக் கூடாது. 

  • கர்ப்பமாக இருப்பவர்கள்
  • சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள,
  • தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்ப வர்கள்,
  • போதைப் பொருள் பழக்கம்
  • வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள். ஆகியோரும் பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்திலும் இரத்ததானம் செய்ய இயலாது.
  • இதய நோய்,
  • சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்,
  • நுரையீரல் பழுதடைந்தவர்கள்,
  • இரத்த அழுத்தம்,
  • ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் அளிக்க இயலாது.
இரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் நமது உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.ஆனால் இரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து இரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுகின்றனவா என்பதை மட்டும் நாம் சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home