Wednesday, March 11, 2015

அறிவரசி சமுகநல கல்வி அறக்கட்டளையின் மூலம் TNPSC I, II, III IV ஆகிய தேர்வுகளுக்கு மாபெரும் இலவச பயிற்சி வகுப்புகள்




அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளையின் மூலம் நமது பகுதி மாணவ மாணவியர், இளைஞர்கள், அரசு வேலை பெற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் I, II, III IV ஆகிய தேர்வுகளுக்கு மாபெரும் இலவச பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சுந்தரேச விலாஸ் உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மிக சிறப்பாக  நடத்தி வருகிறோம். இரண்டாமாண்டு பயிற்சி வகுப்புகள் 05 – 04 – 2015 முதல் சி.க.சுப்பையா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

*      துறை சார்ந்த அனுபமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
*      தமிழ், கணிதம் நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு பாடங்களில் தனிக்கவனம் செலுத்தி துறை வல்லூநர்கள் மூலம் சிறப்பு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
*      கிராம நிர்வாக தேர்விற்கு செய்முறையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
* அரசு போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்று தற்போது அரசுப் பணியில் இருக்கும் வெற்றியாளர்களைக் கொண்டு முன் மாதிரி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
*      ஒவ்வொரு நாள் வகுப்புகளின் முடிவில் மாதிரி தேர்வுகள் நடத்தி பயிற்றுவிக்கப்படுகிறது.
நமது பகுதி மாணவ மாணவியர், இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்
முனைவர் செ.வீர அழகிரி
அறிவரசி சமூகநல கல்வி அறக்கட்டளை
ஆதனூர், வேதாரண்யம்.

8973431246  aswedtrust@gmail.com

@ தமிழ் சித்தர்கள் மருத்துவ முறையில் (வர்மா, முத்திரை, தொடுவர்மம், அக்குபஞ்சர்) சிகிச்சையளிக்கிறோம்.
@ எங்களது அறக்கட்டளையின் சார்பாக பள்ளியில் இருந்து இடையில் நின்று பள்ளி செல்லாமல் விட்ட இடை நிற்றல் மாணவ மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிப்பு தொடர வழி செய்கிறோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home