கண்ணன் பாட்டு - சி.சுப்ரமணிய பாரதியார்
1. கண்ணன் - என் தோழன்
புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்
பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்
என்ன வழியென்று கேட்கில், உபாயம்
''கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்
உன்னை யடைந்தேன்'' என்னில் உபாயம்
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி
சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
வன்ன மகளிர் வசப்பட வேபல
சொன்ன படிநட வாவிடி லோமிகத்
தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்
உண்மை தவறி நடப்பவர் தம்மை
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
பெண்மைக் குணமுடை யான்; - சில நேரத்தில்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்
---
2. கண்ணன் - என் தாய்
(நொண்டிச் சிந்து)
உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
கண்ணனெனும் பெயருடையாள், - என்னை
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல
இன்பமெனச் சிலகதைகள் - எனக்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்
விந்தைவிந்தை யாக எனக்கே - பல
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
மந்தை மந்தையா மேகம் - பல
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
வானத்து மீன்க ளுண்டு - சிறு
நானத்தைக் கணக்கிடவே - மனம்
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
நல்லநல்ல நதிகளுண்டு - அவை
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
சோலைகள் காவினங் கள் - அங்கு
சாலவும் இனியன வாய் - அங்கு
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
கோலமுஞ் சுவையு முற - அவள்
தின்றிடப் பண்டங்களும் - செவி
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
நன்றியல் காதலுக் கே - இந்த
இறகுடைப் பறவைக ளும் - நிலந்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை
சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
மீத்திடும் பொழுதினி லே - நான்
கோத்தபொய் வேதங்களும் - மதக்
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள
வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
நீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற
---
3. கண்ணன் - என் தந்தை
(நொண்டிச் சிந்து)
ப்ரதான ரஸம் - அற்புதம்
பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்
நேமித்த நெறிப்படி யே - இந்த
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்க
செல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
நல்வழி செல்லு பவரை - மனம்
நாவு துணிகுவ தில்லை - உண்மை
யாவருந் தெரிந்திடவே - எங்கள்
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
தேவர் குலத்தவன் என்றே - அவன்
பிறந்தது மறக் குலத்தில்; - அவன்
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
துறந்த நடைக ளுடையான்; - உங்கள்
ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல
இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
வன்புகள் பல புரிவான்; - ஒரு
முன்பு விதித்த தனையே - பின்பு
வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்க ளென்று புவியோர் - சொல்லும்
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
சீலம் அறிவு கருமம் - இவை
மேலவர் கீழவ ரென்றே - வெறும்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
வயது முதிர்ந்து விடினும் - எந்தை
துயரில்லை; மூப்பு மில்லை, - என்றும்
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
அன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
---
4. கண்ணன் என் - சேவகன்
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!
---
5. கண்ணன் என் அரசன்
பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'
கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
வான நீர்க்கு வருந்தும் பயிரென
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
ஆல கால விடத்தினைப் போலவே,
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?
கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்
---
6. கண்ணன் என் சீடன்
(ஆசிரியப்பா)
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்,
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் ... 5
என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன். ... 10
சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்,
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் ... 15
சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் ... 20
தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்;
வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் ... 25
அவலாய்மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
''இன்னது செய்திடேல், இவரோடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், ... 30
இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்''
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்.
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் ... 35
நெறியினக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன். நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி யுடையேன்,
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் ... 40
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய் என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் ... 45
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் ... 50
தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது.
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் ... 55
சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், ... 60
சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை.
கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, ... 65
எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.
இதனால், ... 70
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று 'எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்'
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி,
'எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் ... 75
ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்'
என்றுளத் தெண்ணி இசைந்திடு ஞ் சமயங்
காத்திருந் திட்டேன். ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கொண்டு, ... 80
''மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். ... 85
சாத்திர நாட்டமும், தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி ... 90
இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் ... 95
என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்'' என்றேன். கண்ணனும்,
''அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே ... 100
தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன்'' என்றான். இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி, ''என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் ... 105
கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி'' என்றேன்
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
'செல்வேன்' என்றான்; சினத்தொடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் ''கவினுற இதனை . ... 110
எழுதுக'' என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்,
''செல்வேன்'' என்றான். சினந்தீ யாகிநான்
''ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்;
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது ... 115
பிழையிலை போலும்'' என்றேன். அதற்கு,.
''நாளவந் திவ்வினை நடத்துவேன்'' என்றான்.
''இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல்'' என்றுமினேன். கண்ணனும் ... 120
''இல்லை'' யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்விசந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
''சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே. ... 125
என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ'' என்று
இடியுறச் சொன்னேன்; கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
''மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் ... 130
தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.
தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன்.
மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!''
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். ... 135
சென்றனன் கண்ணன். திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்.
''ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்.
தொழில்பல புரிவேன், துன்பமிங் கென்றும், ... 140
இனிநினக் கென்னால் எய்திடா'' தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்:
''மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் ... 145
அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ'' என்றான். வாழ்கமற் றவனே! ... 150
---
7. கண்ணன் - எனது சற்குரு
புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி
சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
தோடும் யமுனைக் கரையிலே - தடி
கூடு முகமும், தெளிவுதான் - குடி
தாடியும் கண்டு வணங்கியே - பல
என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
தன்னைச் சரணென்று போவையில் - அவன்
மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
வேடந் தரித்த கிழவரைத் - கொல்ல
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா - உண்மை
என்று கருதி யிருந்திட்டேன்; - பின்னர்
நன்று மருவூக! மைந்தனே! - பர
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
சந்திரன் சோதி யுடையதாம்; - அது
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
''ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; - கடல்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
''சித்தத்தி லேசிவம் நாடுவார், - இங்கு
மத்த மதவெங் களிறுபோல் நடை
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
சுத்த சுகந்தனி யாநந்தம்' - எனச்
'சோதி அறிவில் விளங்கவும் - உயர்
நீதி முறைவழு வாமலே - எந்த
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
''ஆடுதல், பாடுதல், சித்திரம் -கவி
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
காடு புதரில் வளரினும் - தெய்வக்
''ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
தேனி லினிய குரலிலே - கண்ணன்
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
---
8. கண்ணம்மா - என் குழந்தை
(பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
(ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)
ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப
பபப -பதப - பமா - கரிஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோவாபப்படி மாற்றி பாடுக.
சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஓடி வருகையிலே - கண்ணம்மா!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
உச்சி தனை முகந்தால் - கருவம்
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
முல்லைச் சிரிப்பாலே - எனது
இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
அன்பு தருவதிலே - உனைநேர்
மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
----
9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
நகேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1.
தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
2.
தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
3.
அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
4.
பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
5,
புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
6.
அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
7.
விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
8.
அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
9.
கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
-------
10. கண்ணன் - என் காதலன்
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
நீண்ட பொழுதாக - எனது
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
பாயின் மிசை நானும் - தனியே
தாயினைக் கண்டாலும் - சகியே!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
உணவு செல்லவில்லை; - சகியே!
மணம் விரும்பவில்லை; - சகியே!
குண முறுதி யில்லை; - எதிலும்
கணமும் உளத்திலே - சுகமே
பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
கோலக் கிளிமொழியும் - செவியில்
நாலு வயித்தியரும் - இனிமேல்
பாலத்துச் சோசியனும் - கிரகம்
கனவு கண்டதிலே - ஒருநாள்
இனம் விளங்க வில்லை - எவனோ
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மனதில் மட்டிலுமே - புதிதோர்
உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
------
11. கண்ணன் - என் காதலன் - 2
உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை - ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.
நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச்
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
வித்தைப் பெயருடைய வீணியவளும்
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
---------
12. கண்ணன் - என் - காதலன் -3 (காட்டிலே தேடுதல்)
ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்
ரசங்கள்: பயாநகம், அற்புதம்.
திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.
1.
மிக்க நலமுடைய மரங்கள், - பல
விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்)
2.
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்)
3.
ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்)
4.
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
சத்தத் தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் - இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்)
5.
கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்)
6.
''பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி
கண்ணே, எனதிருகண் மணியே - எனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.
7.
சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.''
8.
என்றே கொடியவிழி வேடன் - உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
நின்றே இருகரமுங் குவித்து - அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்:
9.
''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?''
10.
''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே''
11.
காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட
கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன்.
12.
கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி!
-------
13. கண்ணன் - என் காதலன் -4 (பாங்கியைத் தூது விடுத்தல்)
தங்கப்பாட்டு மெட்டு
ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்.
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
--------
14. கண்ணன் - என் காதலன் - 5 (பிரிவாற்றாமை)
ராகம் - பிலஹரி
ஆசை முகமறந்து போச்சே - இதை
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக்
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
------
15. கண்ணன் - என் காந்தன்
வராளி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
பனிசெய் சந்தனமும் - பின்னும்
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
இனிய பொட்டிடவே - வண்ணம்
கொண்டை முடிப்பதற்கே; - மணங்
வண்டு விழியினுக்கே - கண்ணன்
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
சங்கையி லாதபணம் - தந்தே
பங்கமொன் றில்லாமல் - மகம்
மங்கள மாகுமடீ! - பின்னோர்
----
16. கண்ணம்மா - என் காதலி - 1 (காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
பட்டுக் கருநீலப் - புடவை
நட்ட நடு நிசியில் - தெரியும்
சோலை மல ரொளியோ - உனது
நீலக் கடலலையே - உனது
கோலக் குயி லோசை - உனது
வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!
சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
----
17. கண்ணம்மா - என் காதலி - 2 (பின் வந்து நின்று கண் மறைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
மூலைக் கடலினையவ் வான வளையம்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
சாலப் பலபல நற் பகற்கனவில்
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
-----
18. கண்ணம்மா - என் காதலி - 3 (முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
------
19. கண்ணம்மா - என் காதலி - 4 (நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண்
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை
சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்
முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
----
20. கண்ணம்மா - என் காதலி - 5 (குறிப்பிடம் தவறியது)
செஞ்சுருட்டி - ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
----
21. கண்ணம்மா - என் காதலி - 6 யோகம்
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ... 1
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5
காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ... 6
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ... 7
தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ... 8
-----
22. கண்ணன் - என் ஆண்டான்
புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், கருணை
தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
சேரி முழுதும் பறையடித் தேயருட்
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
-----
23. கண்ணம்மா - எனது குலதெய்வம்
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)
2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)
3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)
4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)
5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home