குடும்ப விளக்கு _ புரட்சி கவிஞர் பாரதிதாசன் (கனகசுப்பரத்னம், 1891 - 1964)
முதற் பகுதி
ஒருநாள் நிகழ்ச்சி
அகவல்
காலை மலர்ந்தது
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.
அவள் எழுந்தாள்
தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!
கோலமிட்டாள்
சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!
காலைப் பாட்டு
இல்லத்தினிலே எகினாள்; ஏகி
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்.
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த்
தூங்கிய பிள்ளைகள், தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே,
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்.
அமைதி தழுவிய இளம் பகல்,
கமழக் கமழத் தமிழிசை பாடினாள்.
வீட்டு வேலைகள்
பறந்தனள் பச்சைப் பசுங்கிளி; மாடு
கறந்தனள்; வீட்டை நிறம் புரிந்தனள்;
செம்பு தவளை செழும்பொன் ஆக்கினாள்;
பைம்புனல் தேக்கினாள், பற்ற வைத்த
அடுப்பினில் விளைத்த அப் பம் அடுக்கிக்
குடிக்க இனிய கொத்து மல்லிநீர்
இறக்கிப் பாலொடு சர்க்கரை இட்டு
நிறக்க அன்பு நிறையப் பிசைந்த
முத்தான வாயால் முழுநிலா முகத்தாள்
"அத்தான்" என்றனள்; அழகியோன் வந்தான்.
கணவனுக்கு உதவி
வந்த கணவன் மகிழும் வண்ணம்
குளிர்புனல் காட்டிக் குளிக்கச் சொல்லி,
துளிதேன் சூழும் களிவண்டு போல
அன்பனின் அழகிய பொன்னுடல் சூழ்ந்து,
மின்னிடை துவள, முன்னின் றுதவி,
வெள்ளுடை விரித்து மேனி துடைத்தபின்,
குழந்தைகட்குத் தொண்டு
" பிள்ளைகாள்" என்றனள்! கிள்ளைகள் வந்தனர்!
தூய பசும்பொன் துளிகளைப் போன்ற
சீயக் காய்த்தூள் செங்கையால் அள்ளிச்
சிட்டுக் காட்டியும் சிறுகதை சொல்லியும்
தொட்டுத் தேய்த்துத் துளிருடல் நலங்காது
நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு
நன்னீ ராட்டி நலஞ்செய்த பின்னர்
பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல்
ஓவியக் குழந்தைகள் உடலில்நீர்த் துளிகளைத்
துடைத்து நெஞ்சில் சுரக்கும் அன்பை
அடங்கா தவளாய் அழகுமுத் தளித்தே,
"பறப்பீர் பச்சைப் புறாக்களே"என, அவர்
அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.
காலையுணவு
அடுக்களைத் தந்தி அனுப்பினாள் மங்கை;
"வந்தேன் என்று மணாளன் வந்தான்;
"வந்தோம் என்று வந்தனர் பிள்ளைகள்.
பந்தியில் அனைவரும் குந்தினர் வரிசையாய்.
தழைத்த வாழைத் தளிரிலை தன்னில்
பழத்தொடு படைத்த பண்டம் உண்டனர்;
காய்ச்சிய நறுநீர் கனிவாய்ப் பருகினர்.
தய்தான் வாத்திச்சி
நேரம் போவது நினையா திருக்கையில்
பாய்ச்சிய செங்கதிர் பட்டது சுவர்மேல்;
அவள்கண்டு, காலை "ஆறுமணி" என
உரைத்தாள்; கணவன், "இருக்கா" தென்றான்.
உண்டுண் டுண்டென ஒலித்தது சுவரின்
அண்டையில் இருந்த அடுக்கும் மணிப்பொறி.
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்.
அவள் வாத் திச்சி அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள்; "வேளையா யிற்றே!
பள்ளிக்குப் பிள்ளைகள்
எழுங்கள்" என்றனள், எழுந்தனர்; சுவடியை
ஒழுங்குற அடுக்கி, உடை அணிவித்துப்
புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள்
சின்னவர் காலிற் செருகிச் சிறுகுடை
கையில் தந்து, கையடு கூட்டித்
தையல், தெருவரை தானும் நடந்து,
பள்ளி நோக்கித் தள்ளாடி நடக்கும்
பிள்ளைகள் பின்னழகு வெள்ளம் பருகிக்
கிளைமா றும்பசுங் கிளிபோல் ஓடி
அளவ ளாவினாள் ஆள னிடத்தில்.
கடைக்குப்போகும் கணவன்
கடைக்குச் செல்லக் கணவன், அழகிய
உடைகள் எடுத்தே உடுக்க லானான்.
"கழுத்துவரை உள்ள கரிய தலைமயிர்
மழுக்குவீர் அத்தான்"என்று மங்கை சொன்னாள்.
நறுநெய் தடவி நன்றாய்ச் சீவி
முறுக்கு மீசையை நிறுத்திச் சராயினை
இட்டிடை இறுக்கி எழிலுறத் தொங்கும்
சட்டை மாட்டத் தன்கையில் எடுத்தான்.
பொத்தலும் கிழிசலும் பூவை கண்டாள்;
தைத்தாள் தையற் சடுகுடு பொறியால்.
ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப்
பாண்டிய மன்னன் மீண்டது போல,
உடுத்திய உடையும் எடுத்த மார்பும்
படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்.
வெற்றிலைச் சுருள்
ஒற்றி வைத்த ஒளிவிழி மீட்டபின்,
வெற்றிலைச் சுருள் பற்றி ஏந்தினாள்;
கணவன் கைம்முன் காட்டி, அவன்மலர்
வாயில் தரத்தன் மனத்தில் நினைத்தாள்.
தூயவன் அப்போது சொன்ன தென்னெனில்,
"சுருளுக்கு விலைஎன்ன? சொல்லுவாய்?" என்ன;
"பொருளுக்குத் தக்கது போதும்" என்றாள்.
"கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே" என்றான்.
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்.
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து,
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே!
அறுசீர் விருத்தம்
அவளின் காதலுள்ளம்
உணவுண்ணச் சென்றாள், அப்பம்
உண்டனள், சீனி யோடு
தணல்நிற மாம் பழத்தில்
தமிழ்நிகர் சுவையைக் கண்டாள்!
மணவாளன் அருமை பற்றி
மனம்ஒரு கேள்வி கேட்க,
'இணையற்ற அவன் அன்புக்கு
நிகராமோ இவைகள்' என்றாள்.
பிள்ளைகள் நினைவு
பள்ளிக்குச் சென்றி ருக்கும்
பசங்களில் சிறிய பையன்
துள்ளிக் குதித்து மான்போல்
தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று)
உள்ளத்தில் நினைத்தாள்;ஆனால்
மூத்தவன் உண்டென் றெண்ணித்
தள்ளினாள் அச்சந் தன்னை!
தாழ்வாரம் சென்றாள் நங்கை!
வீட்டு வேலைகள்
ஒட்டடைக் கோலும் கையும்
உள்ளமும் விழியும் சேர்த்தாள்;
கட்டிய சிலந்திக் கூடு,
கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் "தூய்மை"
தனியர சாளச் செய்து,
சட்டைகள் தைப்ப தற்குத்
தையலைத் தொட்டாள் தையல்!
தையல் வேலை
ஆடிக்கொண் டிருந்த தையற்
பொறியினை அசைக்கும் ஓர்கை;
ஓடிக்கொண் டிருக்கும் தைத்த
உடையினை வாங்கும் ஓர்கை!
பாடிக்கொண் டேயிருக்கும்
பாவையின் தாம ரைவாய்;
நாடிக்கொண் டேயிருக்கும்
குடித்தன நலத்தை நெஞ்சம்!
மரச்சாமான்கள் பழுது பார்த்தல்
முடிந்தது தையல் வேலை.
முன்உள்ள மரச்சா மான்கள்
ஒடிந்தவை, பழுது பார்த்தாள்;
உளியினால் சீவிப் பூசிப்
படிந்துள்ள அழுக்கு நீக்கிப்
பளபளப் பாக்கி வைத்தாள்.
கொல்லூற்று வேலை
இடிந்துள்ள சுவர் எடுத்தாள்;
சுண்ணாம்பால் போரை பார்த்தாள்.
மாமன் மாமிக்கு வரவேற்பு
நாத்தியார் வீடு சென்ற
நன்மாமன், மாமி வந்தார்.
பார்த்தனள்;உளம் மகிழ்ந்தாள்.
பறந்துபோய்த் தெருவில் நின்று
வாழ்த்திநல் வரவு கூறி
வணக்கத்தைக் கூறி, "என்றன்
நாத்தியார், தங்கள் பேரர்
நலந்தானா மாமி" என்றாள்.
வண்டிவிட் டிறங்கி வந்த
மாமியும், மாமனும், கற்
கண்டொத்த மரும கட்குக்
கனியத்த பதிலுங் கூறிக்
கொண்டுவந் திட்ட பண்டம்
குறையாமல் இறக்கச் சொன்னார்.
வண்டியில் இருந்த வற்றை
இறக்கிடு கின்றாள் மங்கை.
மாமி மாமன் வாங்கி வந்தவை
கொஞ்சநாள் முன்வாங் கிட்ட
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள்,குங் குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா,சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி,
புதியஓர் தவலை நாலு,
பொம்மைகள்,இரும்புப் பெட்டி
மிதியடிக் கட்டை,பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்;
எதற்கும்ஒன் றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந் தாணி;
தலையணை, மெத்தைக் கட்டு,
சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்;
இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்;
கைத்தடி,செந்தா ழம்பூ;
திருமணம் வந்தால் வேண்டும்
செம்மரத் தினில்முக் காலி;
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்;
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு;
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்;
மூலைக்கு வட்டம் போட்டு
முடித்தமே லுறையும், மற்றும்
மேலுக்கோர் சுருக்குப் பையும்
விளங்கிடும் குடை, கறுப்புத்
தோலுக்குள் காயிதத்தில்
தூங்கும்மூக் குக்கண் ணாடி,
சேலொத்த விழியாள் யாவும்
கண்டனள் செப்ப லுற்றாள்:
மருமகள் வினா
"இவையெல்லாம் வண்டிக் குள்ளே
இருந்தன என்றால் அந்த
அவைக்களம் தனிலே நீவிர்
எங்குதான் அமர்ந்திருந்தீர்?
சுவைப்புளி அடைத்து வைத்த
தோண்டியின் உட்பு றத்தில்
கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும்
கால்வைக்க இடமிராதே?"
மாமி விடை
என்றனள்; மாமி சொல்வாள்:
"இவைகளின் உச்சி மீதில்
குன்றுமேல் குரங்கு போல
என்றனைக் குந்த வைத்தார்!
என்தலை நிமிர, வண்டி
மூடிமேல் பொத்த லிட்டார்;
உன்மாமன் நடந்து வந்தார்.
ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!
மாமன் பேச்சு
"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன்
என்றாளே உன்றன் மாமி!
யாரெல்லாம் சிரித்து விட்டார்?
எனஉன்றன் மாமியைக் கேள்;
பாரம்மா பழுத்த நல்ல
பச்சைவா ழைப்ப ழங்கள்!
நேரிலே இதனை யும்பார்
பசுமாட்டு நெய்யின் மொந்தை!
வண்டியில் எவ்வி டத்தில்
வைப்பது? மேன்மை யான
பண்டத்தைக் காப்ப தற்குப்
பக்குவம் தெரிந்தி ருந்தால்
முண்டம்இப் படிச் சொல்வாளா?
என்னதான் முழுகிப் போகும்
அண்டையில் நடந்து வந்தால்?"
என்றனன், அருமை மாமன்.
மருமகள் செயல்
மாமனார் கொண்டு வந்த
பொருளெலாம் வரிசை செய்து,
தீமையில் லாத வெந்நீர்
அண்டாவில் தேக்கி வைத்துத்
தூய்மைசேர் உணவு தந்து,
துப்பட்டி விரித்த மெத்தை
ஆம்,அதில் அமரச் சொல்லிக்
கறிவாங்க அவள் நடந்தாள்.
கடையிலே செலவு செய்த
கணக்கினை எழுதி வைத்தாள்;
இடையிலே மாமன் "விக்குள்
எடுத்தது தண்ணீர் கொஞ்சம்
கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க்
கூடத்துப் பதுமை ஓடி
அடுக்களை அரங்கில், நெஞ்சம்
அசைந்திட ஆட லானாள்.
என்ன கறி வாங்கலாம்?
கொண்டவர்க் கெது பிடிக்கும்
குழந்தைகள் எதை விரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன
உண்பதில் எவரு டம்புக்(கு)
எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
உண்பவர் தம்மைக் கண்டாள்!
பிள்ளைகள் உள்ளம் எப்படி?
பொரியலோ பூனைக் கண்போல்
பொலிந்திடும்; சுவை மணக்கும்!
"அருந்துமா சிறிய பிள்ளை"
எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;
இருந்தந்தச் சிறிய பிள்ளை
இச்சென்று சப்புக் கொட்டி
அருந்தியே மகிழ்ந்த தைப்போல்
அவள்காதில் ஓசை கேட்கும்!
அத்தானுக்கு எது பிடிக்கும்?
பொருளையும் பெரிதென் றெண்ணாள்,
பூண்வேண்டாள்; தனைம ணந்தோன்
அருளையே உயிரென் றெண்ணும்
அன்பினாள், வறுத்தி றக்கும்
உருளைநற் கிழங்கில் தன்னை
உடையானுக் கிருக்கும் ஆசைத்
திருவுளம் எண்ணி எண்ணிச்
செவ்விள நகைசெய் கின்றாள்.
எதிர்கால நினைவுகள்
இனிவாழும் நாள் நினைத்தாள்
இளையவர் மாமன் மாமி;
நனிஇரங் கிடுதல் வேண்டும்;
நானவர்க் கன்னை போல்வேன்.
எனதத்தான் தனையும் பெற்று
வாழ்ந்தநாள் எண்ணும் போதில்
தனிக்கடன் உடையேன், நானோர்
தவழ்பிள்ளை அவர்கட் கென்றாள்.
கிழங்கினை அளியச் செய்வாள்,
கீரையைக் கடைந்து வைப்பாள்
கொழுங்காய்ப்பச் சடியே வைப்பாள்
கொல்லையின் முருங்கைக் காயை
ஒழுங்காகத் தோலைச் சீவிப்
பல்லில்லார் உதட்டால் மென்று
விழுங்கிடும் வகை முடித்து
வேண்டிய எலாம் முடித்தே.
முதியவருக்குத் துணை
தூங்கிய மாமன் "அம்மா
தூக்கென்னை" என்று சொல்ல,
ஏங்கியே ஓடி மாமன்
இருக்கின்ற நிலைமை கண்டு,
வீங்கிய காலைப் பார்த்தாள்
"எழுந்திட வேண்டாம்!" என்றாள்;
தாங்கியே மருந்து பூசிச்
சரிக்கட்டிப் படுக்க வைத்தாள்.
அவளோர் மருத்துவச்சி
நாடியில் காய்ச்சல் என்றே
நன்மருந் துள்ளுக் கீந்தாள்;
ஓடிநற் பாலை மொண்டு,
மருவுலைக் கஞ்சி ஊற்றி,
வாடிய கிழவர்க் கீந்தாள்;
மாமிக்கோ தலைநோக் காடாம்,
ஓடிடச் செய்தாள் மங்கை
ஒரேபற்றில் நொடிநே ரத்தில்.
அள்ளி அணைத்தாள் பிள்ளைகளை
குழந்தைகள் பள்ளி விட்டு
வந்தார்கள்; குருவிக் கூட்டம்
இழந்தநல் லுரிமை தன்னை
எய்தியே மகிழ்வ தைப்போல்;
வழிந்தோடும் புதுவெள் ளத்தை
வரவேற்கும் உழவரைபோல்,
எழுந்தோடி மக்கள் தம்மை
ஏந்தினாள் இருகை யாலும்!
உடை மாற்றினாள்
பள்ளியில் அறிஞர் சொன்ன
பாடத்தின் வரிசை கேட்டு,
வெள்ளிய உடை கழற்றி,
வேறுடை அணியச் செய்தே,
உள்வீட்டில் பாட்டன் பாட்டி
உள்ளதை உணர்த்தி, அந்தக்
கள்ளினில் பிள்ளை வண்டு
களித்திடும் வண்ணம் செய்தாள்!
தலைவி சொன்ன புதுச்செய்தி
அன்றைக்கு மணம் புரிந்த
அழகியோன் வீடு வந்தான்;
இன்றைக்கு மணம் புரிந்தாள்
எனும்படி நெஞ்சில் அன்பு
குன்றாத விழியால், அன்பன்
குளிர்விழி தன்னைக் கண்டாள்;
"ஒன்றுண்டு சேதி" என்றாள்;
"உரை"என்றான்; "அம்மா அப்பா
வந்தார்"என் றுரைத்தாள், கேட்டு
"வாழிய" என்று வாழ்த்தி,
"நொந்தார்கள்" என்று கேட்டு
நோயுற்ற வகை யறிந்து,
தந்தைதாய் கண்டு "உங்கள்
தள்ளாத பருவந் தன்னில்
நைந்திடும் வண்ணம் நீங்கள்
நடந்திட லாமா? மேலும்,
முதியோர்க்கு
ஒக்கநல் லிளமை கண்டீர்
கல்விநல் லொழுக்கம் கண்டீர்;
மெய்க்காதல் மணமும் பெற்றீர்;
இல்லற வெற்றி பெற்றீர்;
மக்களைப் பெற்றீர்;வைய
வழ்வெலாம் பெற்றீர்; என்னால்
எக்குறை பெற்றீர்? இன்னும்
ஏனிந்தத் தொல்லை ஏற்றீர்?
அதிர்ந்திடும் இளமைப் போதில்
ஆவன அறங்கள் செய்து,
முதிர்ந்திடும் பருவந் தன்னில்
மக்கட்கு முடியைச் சூட்டி,
எதிர்ந்திடும் துன்ப மேதும்
இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டு, நெஞ்சு
மகிழ்வதே வாழ்வின் வீடு!"
அறிவுக்குத் திருவிளக்கு
என்றனன்; தந்தை சொல்வார்:
"என்னரும் மகனே, மெய்தான்
ஒன்றிலும் கவலை கொள்ளேன்
உன்னைநான் பெற்ற தாலே!
அன்றியும் உன்பெண் டாட்டி
அறிவுக்கோர் திரு விளக்காம்,
இன்றுநான் அடைந்த நோய்க்கும்
நன்மருந் திட்டுக் காத்தாள்.
செல்லப்பா உணவு கொள்ளச்
சிறுவர்கள் தமையும் உண்ணச்
சொல்லப்பா!" எனவே, அன்பு
சொரிந்திடச் சொல்லி டுந்தன்
நல்லப்பா மகிழும் வண்ணம்
நல்லதப் பாஎன் றோதி,
மெல்லப்பா வைபு ரிந்த
விருந்தினை அருந்த லுற்றான்.
பிள்ளைக்கு அமுது
குழந்தைகள் உடனி ருந்து
கொஞ்சியே உண்ணு கின்றார்
பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப்
படித்தவர் விழுங்குதல் போல்!
ஒழுங்குறு கறிகள் தம்மில்
அவரவர் உளம றிந்து
வழங்கினாள் அள்ளி அள்ளி,
வழிந்திடும் அன்புள் ளத்தாள்.
பாடு என்றான்
அனைவரும் உண்டார் அங்கே!
கூடத்தில் அமர்ந்தி ருந்தார்.
சுனைவரும் கெண்டைக் கண்ணாள்
துணைவனை அணுகி, "நீவிர்
எனைவரும் படிஏன் சொல்ல
வில்லை" என்றாள் சிரித்தே!
'தினைவரும் படிஇல் லார்க்கும்
திருநல்கும் தமிழ்பா' டென்றான்.
யாழ் எடுத்தாள்
குளிர்விழி இளநகைப் பூங்
குழலினாள் குந்தினாள்; தன்
தளிருடல் யாழ் உடம்பு
தழுவின; இரு குரல்கள்
ஒளியும் நல்வானும் ஆகி
உலவிடும் இசைத்தேர் ஏறித்
"தெளிதமிழ்" பவனி வந்தாள்
செவிக்கெலாம் காட்சி தந்தாள்.
கவிதை பாய்ச்சினாள்
உள்ளத்தில் கவிதை வைத்தே
வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்;
தெள்ளத்தெ ளிந்த நீர்போல்,
பள்ளத்தில் கோடைத் துன்பம்
உயிரெல்லாம் தமிழில் தொக்கின
வீடெல்லாம் இசையே; வீட்டில்
ஏடெலாம் அறிவே; ஏட்டின்
காடெலாம் ஆடும் கூத்தே;
மாடெல்லாம் இவ்வா றானால்
கடையை மறந்தீரோ?
இடையினில் தனை மறந்தே
"கடையினை மறந்து விட்டீர்
நடையினில் அன்னம் சொன்னாள்;
உடையவன் "ஆம் ஆம்" என்றான்;
மனைவியிடம் பிச்சை கேட்டான்
"கண்ணல்ல; நீதான் சற்றே
உண்பதற் கனுப்பி, உண்டு
பெண்ணல்ல" என்று சொல்லிச்
கண்ணல்ல, கருத்தும் போன்றாள்,
கடையின் நடைமுறை
மல்லியை அளப்பார்; கொம்பு
சொல்லிய விலை குறைக்கச்
நல்லியல் தொகை கொடுப்பார்;
வெல்லம்என் றொருகு ழந்தை
அவள் வாணிபத் திறமை
களிப்பாக்குக் கேட்பார்க் கீந்து
புளிப்பாக்கி தீர்ந்த பின்பு
அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்;
கிளிப்பேச்சுக் காரி யின்பால்
இளகிய நெஞ்சத் தாளை
அளவாக இலாபம் ஏற்றி
மிளகுக்கு விலையும் கூறி
புளுகாமல் புகன்ற வண்ணம்
கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள்
கொண்டவன் வந்தான்; கண்கள்
கண்டுள்ள கணக்கின் வண்ணம்
தண்டலும் கொடுத்தேன்; விற்று
உண்டங்கு வேலை" என்றே
வீட்டறை மருத்துவமைனை
படுக்கையில் மாம னாரைப்
கடுக்கை தீர்ந்திலதோ" என்று
உடுக்கையும் மாற்று வித்து,
தடுக்கினி லிருந்து தூக்கிச்
மற்றும் வீட்டு வேலை
வரிசையாய்க் காய வைத்த
பெரிசான சாலில் சேர்த்தாள்;
உரியநல் தீனி வைத்தாள்;
வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள்;
கடற்கரையில்
சிற்றுண வளித்தாள்; பின்பு
பெற்றதன் மக்கள் சூழப்
பொற்கொடி படர்ந்தாள் தேனைப்
வற்றாத வெள்ளக் காட்டின்
கடற்கரைக் காட்சி
அக்கரை செலும்உள் ளத்தை
இக்கரை அலையின் ஆர்ப்பும்,
மிக்கொளி மிதக்கும் மேனி
"ஒக்கவே வாழ்க மக்காள்"
காட்சி இன்பம்
குளிர்புனல் தெளிவி லெல்லாம்
துளிதொறும் உயிர்து டிக்கும்;
வெளியெலாம் அரசு செய்யும்
களியெலாம் காணக் காணக்
கடற் காற்று
கடலிடைப் புனலில் ஆடிக்
உடலிடைப் பூசு கின்ற
அடர்சிற கன்னப் புட்கள்
நடையடு நடந்து வீடு
இரவுக்கு வரவேற்பு
மேற்றிசைக் கதிர்ப்ப ழத்தை
மாற்றுடை யாய் உடுத்து
கோற்கிளை ஒடுங்கும் புட்கள்
காற்சிலம் பசையக் காதற்
திருவிளக் கேந்தி வந்து
உருவிளக் கிடவீட் டுக்குள்
ஒருபெருங் கலயத் துள்ளே
பெரியோரின் உள்ளம் எங்கும்
அத்தானை எதிர்பார்க்கின்றாள்
கட்டுக்குள் அடங்கா தாடிக்
சிட்டுக்கள், சுவடிக் குள்ளே
விட்டுப்பின் அடுக்க ளைக்குள்
எட்டுக்கு மணி அடிக்க
எண்சீர் விருத்தம்
கட்டில் அழகு
சரக்கொன்றை தொங்ககவிட்ட பந்த லின்கீழ்
இருக்கின்ற மெத்தைதலை யணைகள் தட்டி
கரைக்கின்ற கலையத்துட் கரைத்துத் தென்றல்
சுரக்கின்ற அன்பினால், தெருவில் மீண்டும்
அவன் மலை போன்ற செல்வம்
பறக்கின்ற கருங்குயிலாள் மீண்டும் வீட்டில்
சிறக்கின்ற செம்பினிலே ஊற்றி வைத்துச்
நிறக்கின்ற மணிவிளக்கைச் சிறிது செய்து
மறைக்கின்ற படிமறைத்து மற்றும் சென்று
பிள்ளைகட்குப் பரிசு
கால்ஒடிந்து போகுமுன்னே அவனும் வந்தான்;
மேலிருந்து "பிள்ளைவளர்ப் புப்போ ட்டிக்கு
"ஆல்ஒடிந்து வீழ்ந்தாலும் தோள்கள் தாங்கும்
பாலொடுசர்க் கரைகலந்த இனிய சொல்லாய்
பழங்காலக் கிழங்கள்
அறையினிலே படுத்திருந்த பெற்றோர் காதில்
அறியோமே எம்நாளில்" என்றார் பெற்றோர்.
"குறையின்றி வளர்ப்பவர்கள் பரிசு கொள்ளல்"
அறிந்தாரோ?" எனக் கேட்டார் அக்கா லத்தார்;
அடுக்களையிற் பிள்ளைகள்
பரிசுதனைப் பெற்ற பிள்ளை, ஓடி வந்தான்;
பெரிசாக, இன்மொழிகள் செவிபி ளக்கப்
அரசாட்சி செலுத்தியபின், எல்லா ரும்போய்
ஒருபெரும்போர்க் களம்புகுந்தார், உணவைத் தூக்கி
குழந்தைகள் தூங்கியபின்
அவன்பாடிக் கொண்டிருந்தான் அறைவீட் டுக்குள்
உவந்தருள உணவிட்டுக் கடன் முடித்தாள்;
குவிந்திருக்கும் சுவையுணவு தானும் உண்டாள்;
அவிழ்ந்துவரும் நிலாஒளியால் இதழ்கள் மூடும்
கதவைத் தாழிட்டாள்
கண்டுபடுக் கைதிருத்தி உடைதிருத்திக்
வண்டுவிழி திறக்குமொரு குழந்தை, "தண்ணீர்
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம்
ஒண்பசு,நற் கன்றுக்கு வைக்கோல் ஈந்தே
கட்டிலண்டை மங்கை
தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;
அண்டையிலே மங்கைபோய் "அத்தான்" என்றாள்.
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்;
கண்டான்!கண் டாள்! உவப்பின் நடுவிலே,"ஓர்
பொதுத்தொண்டு செய்தோமா?
"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?
"இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
தன்னலத்தால் என்ன நடக்கும்
"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்
கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்
"அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்
"இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
அன்றன்று புதுமை
"அன்றிலடி நாமிருவர் பழமும் பாலும்
குன்றத்திற் படர்ந்தமலர்க் கொடியே, மண்ணில்
ஒன்றொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்;
அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?
இரவுக்கு வழியனுப்பு விழா
நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும்
மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும்;
சொல்லரிதாய். இனிதினிதாய் நாழி கைபோம்;
புல்லிதழிற் போய்ஒடுங்கும்; தமைம றந்து
இரண்டாம் பகுதி
விருந்தோம்பல்
சிந்துக் கண்ணி
தலைவன் கடைக்குச் சென்றான்
அன்பு மணவாளன்
பின்பு, மனைவிதந்த
சட்டை யுடுத்துத்
பட்டை மடித்த
கண்ணாடி பார்த்துக்
"கண்ணேசெல் கின்றேன்
கடைவிரித்துப் புன்னகைப்புக்
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
தலைவி விருந்தினரை வரவேற்றாள்
தன்னருமை மக்கள்
பின்னரும் ஐயன்செல்லப்
மாட்டி யிருந்த
காட்டி யிருந்ததுவும்
சுடுவெயிலில் காயவைத்த
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
தாண்டி வரும்விருந்தைத்
பூண்ட மகிழ்வால்
"வருக!அம் மாவருக!
வருக! பாப்பா தம்பி"
பொன்துலங்கு மேனி
அன்றலர்ந்த செந்தா
வரவேற்றாள்; வந்தவரின்
அருகில் அறைக்குள்
அண்டாவின் மூடி
மொண்டுபுறந் தூய்மை
சாய்ந்திருக்க நாற்காலி
வாய்ந்திருக்கும் பாய்விரித்தும்
வெள்ளையுறை யிட்டிருக்கும்
உள்ளறையில் ஓடி
தேன்குழலும் உண்ணத்
வான் குழலாள் கொண்டுவந்து
பாலும் பருகும்
நாலும் கலந்து
செந்தாழை, பல்பூக்கள்
வந்தாள் குழல்சூட்டி
நின்ற கண்ணாடி
இன்று மலர்ந்த
நன்னூற்கள் செய்தித்தாள்
என்று சமைக்கும்
விருந்தினர் வரவை மாமன் மாமிக்கு
வந்தோர்கள் கண்டு
"எந்தாயே எந்தாயே
விலாப்புடைக்க வீட்டில்இந்த
பலாப்பழம்போல் எம்வயிறு
இப்போதும் பண்ணியங்கள்
எப்போதுதான் அமைதி"
சற்றேவிடை தருவீர்
பெற்றெடுத்த என்மாமன்
சொல்லிவரு வேன்"என்று
மெல்ல "மாமா மாமி
மாவரச னாரும்
நாவரசும் பெண்ணாள்
வந்துள்ளார்" என்றுரைத்தாள்
மாமன் மாமி மகிழ்ச்சி
"வந்தாரா? மிக்க
காணவோ கண்டு
வீணவா உற்றேன்
துரும்பென்றும் சொல்லவொண்ணா
இரும்பென்றா எண்ணுகின்றாய்
கேட்டுக்கொள் நான்அவரை
வீட்டுக்கு வந்த
நற்றமிழர் சேர்த்தபுகழ்
உற்ற விருந்தை
மோந்தால் குழையும்அனிச்
வாய்ந்தால் குழையும்
வள்ளுவனார் சொன்னார்
உள்ளத்து வைப்பாய்
ஆண்டு பலமுயன்றே
ஈண்டு விருந்தினர்க்கும்
வந்தாரின் தேவை
நந்தா விளக்குன்றன்
இட்டுப்பார் உண்டவர்கள்
தொட்டுப்பார் உன்நெஞ்சைத்
கரும்பென்பார் பெண்ணைக்
விருந்தோம்பும் மேன்மையினா
என்றுரைக்க, மாமி
மாமி மருமகளுக்கு
"முன்வைத்த முத்துத்
பண்ணியங்கள் மிக்கிருக்கும்
வெண்ணெய் விளங்காய்
மறக்கினும் அம்மாவென்(று)
கறக்கப் பசுக்காத்
சேலத்தின் அங்காடிச்
வேலைக் கிடையில்
கலந்த சுளைபிசைந்து
இலந்தவடை வீட்டில்
பாய்நாகர் கோவில்
போய்நீபார் பானையிலே
கொத்தவரை வற்றல்முதல்
வைத்தவரை உண்டுபின்
உற்றிடச்செய்-ஊறுகாய்
இற்றுத்தேன் சொட்டும்
பேருரைத்தால் நீர்சுரக்கும்
மாரிபோல் நல்லெண்ணெய்
வெந்தயம் மணக்கஅதன்
உந்துசுவை மாங்காயின்
காடி மிளகாய்
ணாடியிலே இட்டுமேல்
இஞ்சி முறைப்பாகும்
பிஞ்சுக் கடுக்காய்
கீரைதயிர் இரண்டும்
மோரைப் பெருக்கிடு
சோற்றைஅள் ளுங்கால்
சாற்றைப்போ லேவடியத்
வாழை இலையின்அடி
வீழ விரித்துக்
தண்ணீர்வெந் நீரைத்
வெண்சோ றிடுமுன்
முக்கனியும் தேனில்
ஒக்கநின்றே உண்டபின்பால்
கேட்டும் குறிப்பறிந்தும்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல்
எக்கறியில் நாட்டம்
அக்கறியை மேன்மேலும்
நீமுன் நினைத்து
ஈமுன்கால் சோற்றிலையில்
பாய்ச்சும் பசும்பயற்றுப்
காய்ச்சும் கடிமிளகு
தூய சருகிலுறு
ஆயுணவு தீர்ந்தே
அவர்கைக்கு நீர்ஏந்தி
உவர்கட்டி தன்னை
ஈரம் துடைக்கஎன
ஓரிடத்தே நல்கியே
மேல்விசிறி வீசுவிப்பாய்
தலைவி விருந்தினரிடம்
கால்வலியும் காணாக்
மிக்க மகிழ்ச்சி
தக்க விருந்தினர்பால்
அன்புள்ள அம்மாவே
என்பு மெலிந்தார்
திங்களை அல்லி
தங்கப் புதையல்எனில்
பெற்ற பொழுதன்பால்
பற்றி அணைத்துமுகம்
தாய்வந்தாள் தந்தைவந்தான்
சேய்வந்து காணும்அவாத்
போனாரே தங்களது
ஊன்உறுதி யில்லை
வரஇயலா மைக்காக
தரஇயலு மாஎன்று
என்றுரைத்தால் இல்லத்
தலைவிக்கு விருந்தினர்
"நன்றுரைத்தீர் நாங்கள்போய்க்
அன்பு விருந்தினர்கள்
தன்மாமன் மாமியார்பால்
அறையை மிகத்தூய்மை
நிறையநாற் காலி
"செல்லுக!நீர்" என்றுரைத்தாள்
செல்லலுற்றார் சென்றே
விருந்தினரைக் கண்ட முதியோர்
வந்த விருந்தினர்க்கு
நொந்த படியெழுந்தார்
விருந்தினர் முதியோர்க்கு
"படுத்திருங்கள் ஐயா!
அடுத்திருந்து பேசல்
ஆண்டு பலவும்
தாண்டி உழைத்தலுத்துத்
சென்றநாள் என்னும்
ஒன்றன்பின் ஒன்றாய்
கண்டிருந்த தங்கள்
பண்டிருந்த செய்தி
வில்லியனூர் விட்டு
மெல்லநடக் கும்வெள்ளை
கறுப்புக்குத் தக்கதாய்க்
பொறுப்புள்ள ஆளில்லை!
மூலைக் குளத்தண்டை
காலைப் பரப்பியது
காட்டிப் பிடித்துவந்து
ஓட்டிவந்தேன்; இங்கே
புடவைபல தேவை
கடைகளிலே வாங்கக்
என்றுரைத்துப் பின்னும்
தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்
நின்றிருந்த வீட்டின்
விருந்துவந்த பெண்பால்
இருந்தொருபால் பேசி
நாவரசும் நகைமுத்தும்
நாவரசும் முத்தாள்
பூவரச நீழலிலே
தம்சேதி கூறிப்பின்
கொஞ்சம் இளைப்பென்று
முதியவர்தம் பழைய நினைப்பு
இன்னும் இருக்குமோ
என்று கிழவர்
இயம்பலுற்றார்-இன்றைக்கு
முன்புதைத்த சட்டைக்கு
முன்புதைத்த மூங்கில்தான்
மாவிலைபோல் மேனி
பாவில் ஐந்துபாடி
மாடிப் படியேறும்
ஓடி அணைக்க
தங்களைப் போன்றோர்க்குத்
அங்கிங் கழைத்தேக
இளகல் உடலால்
வளைவுதனை நாணால்
நாளன்றோ ஆக்கிற்று
நாளில் இளமை
நினைத்தால் நமது
அனைத்தும் புரிந்ததென
காட்டாறு காளைப்
நீட்டாய் நிகழ்ந்த
மற்றும் முதியவர்
காவிரியில் என்றன்
பாவிரியப் பண்பாடிப்
ஆற்றில் குளிப்பாட்டும்
சேற்றிலே மாட்டித்
போய்முழுகி னேன்என்
மாய்வின்றி மாடு
மாட்டின்வால் பற்றியதால்
மேலும் முதியவர்
கேட்டீரா இன்னும்
முன்னிருந்த பிள்ளை
பின்னிருந்த கையால்
வலிவாய் எருதிழுத்தும்
நலிவொன்றும் பிள்ளைக்கு
இன்னும் முதியவர்
நீட்டில்லை ஒன்று
ஊட்டி வளர்த்தாலும்
இருக்கப் பிடிக்காத
தெருக்கதவை மெல்லத்
அயலூரில் கூத்துப்பார்த்(து)
வெயில்வருமுன் வீட்டில்
காட்டிக் கலைக்கழகம்
பாட்டை முணுமுணுத்துப்
பிரம்பால் கணக்காயர்
'அரம்பைவந்தாள்' என்றந்தப்
வாய்தவறிச் சொன்னேன்
பாய்தலுற்றார் தந்தைக்கும்
நான்பட்ட தாலையிலே
ஏன்பட்டான் என்றுதான்
முதியவரின் மற்றொரு கதை
பாப்புனைவார் ஓர்நாளில்
போய்ப்புலவர்க் கீயஎனைப்
இட்டபெட்டி யைச்சென்னைச்
இட்டங்கு குந்தி
பாரடா!' என்றொருவன்
'ஆரடா நீ! யென்(று)
உள்ளே விழவுதைத்தேன்
வெள்ளம்போல் தீயரையென்
ஓட்டம் பிடிக்கையிலே
நீட்டும்என் கம்பி
பொல்லாதார் கூட்டம்
எல்லாரும் ஊர்ச்சா
என்றுரைத்தார்! தீயவர்கள்
அன்றே வினைமுடித்தேன்
மற்றும் ஒரு நிகழ்ச்சி
ஆரும் அறியாமல்
சாரும் கடல்தாண்டிச்
செய்யஒரு கட்டுமரம்
கையெட்டும் எல்லையைநான்
உளவறிந்து தீயர்சிலர்
மளமளென ஓட்டி
காணாத் தொலைவினிலே
ஊணோ உறக்கமோ
நட்ட நடுக்கடலில்
எட்டு மணிஇரவில்
மற்றும் ஒரு நற்செய்தி
நாடுதொழும் ஊழியரை
மாடியில்நின் றேகுதித்து
ஐயாயிர மக்கட்(கு)
பொய்யர் தமையெதிர்த்த
சேர்த்த சிறைஎனக்கோர்
சீர்த்தித் தமிழர்க்குத்
மாயும்உயிர் என்றால்,
ஆயினும் என்செய்கை
செல்லாது நாளும்
வல்லாரை நானும்
இளமைப் பருவமோ
இளமை அறிவோ(டு)
நாட்டுக்கு நன்றேயாம்
கேட்டுக்கா ளாகாமல்
அன்பு மலிய
இன்பம் மலியும்!
மறவாமல் மக்கள்
"துறவாமல் இன்பமுண்டோ
என்றுரைத்தார் மாவரசர்,
"நன்றுரைத்தீர் அத்துறவை
இல்லறமே நல்லறம்
தானே தனித்தின்பம்
தேனிதழாள் இன்றிஒரு
ஞாலத் தொடர்பினால்
ஞாலத்துறவில் இன்பம்
"உற்றாரை யான்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
தாய்தந்தை வேண்டேன்
ஓய்வு தவிர்க்கும்
கண்மூக்கு வாய்உடம்பு
ஒண்வாயில் சாத்தி
பேறிழத்தல் பேரின்பம்
கூறிடுவார் கூறுவதே
கண்டாரோ அன்னவர்தாம்
'கண்டவர் விண்டிலர்
என்று மொழிந்தே
நன்று மறைக்க
ஆச்சிரமம்
ஆச்சிரமப் பேரால்
பேச்சியம்பிச் சொத்தைப்
கூட்டம் பெருக்கிக்
ஈட்டும் பொருளுக்(கு)
தோட்டங்கள் கொத்துதற்குத்
மாட்டுக்கு நல்ல
பத்துப்பேர், காதற்
ஒத்துப்போய் நெஞ்சம்
பிள்ளைக்குப் பேர்வைக்க
உள்ளுளவாய் விற்றுவர
மின்னை வணங்க
அன்னை எனச்சொல்ல
திருமால் பிறப்பென்று
வருவாய் விழுக்காடு
வீட்டிலுறும் அந்நரிக்கும்
ஆட்டுக்கண் ணன்சேய்
துறவோன் அறவீ(டு)
மலையடியில் துறவு
நிறத்தை நிலைநிறுத்த
ஒருவன் மலையடியில்
தெரியும் இடந்தேடிச்
வீடமைத்த தாலேதன்
கூடிந்த மெய்யென்றும்
பொன்றாத உண்மையிலை
என்றும், இளமை
புனல்திரை, யாக்கை
அனைத்துலகும் பொய்யென்றும்
மெய், அதனால் மெய்யுணர்தல்
ஐயம் திரிபின்றி
என்றன் அறவிடுதி
என்றும் உதவா(து)
இங்கேகுவிப் பீர்என்றும்
அங்கே குவிக்கட்டும்
பற்றுக்கள் போம்என்றும்,
உற்று வரும்பிறவி
போரடித்து மக்கள்
ஊரடித்துத் தின்னும்
நாட்டுக்குத் தொண்டு
இந்த நெறிகள்எலாம்
கந்தைக்கும், கண்ணுறங்கக்
தொழில்வேண்டு வார்க்குத்
எழில்வேண்டு வார்கள்
கல்வித் துறைக்குத்தான்
செல்விக் குரிமைச்
ஒன்'றென்னும் எண்ணம்
நன்றென்னும் எண்ணம்
பெருநிலத்தில் நற்றமிழர்
அருவருக்க லானதெனக்
சாய்பாபா வாற்பொருளைத்
மேய்பாபா ஏய்க்கின்ற
பன்னும் இவைபோல்
உன்னுங்கால் அந்தோ!
எந்த நெறிபற்றி
அந்த முறையை
எல்லார்க்கும் ஒத்துவரும்
செல்வம் அதனால்
அனைவர்க்கும் உண்டாகும்
தனிநலம்போம்! இன்பமே
இவ்வுலக நன்மைக்கே
ஒவ்வொருவ ரும்கருதி
கல்வியைக் கட்டாயத்
நல்லுடலை ஓம்ப
ஓம்புதல் வேண்டும்
நாம்பெறுதல் நாட்டை
மக்களிடைத் தாழ்வுயர்வு
பொய்க்கதையில் பொல்லா
பிறர்க்கடிமை யுற்றும்
அறக்கொடிதென் றாய்ந்தமைதல்
படைப்பயிற்சி, நல்ல
தடைப்பாடில் லாதெய்தில்
வையம் அறிதல்
ஐயம் அகல
பல்கலையும் பெற்றே
மல்குசீர் வாய்ப்புறுதல்
காதல் வாழ்க்கை
உள்ளம் கவர்ந்தாளின்
வெள்ளத்தில் வெள்ளம்
கண்டு மணம்புரிதல்
பண்டை மணமென்றும்
அடிமை மணமென்றும்
கடிந்து பதிவுமணம்
அன்பால் அவளும்
து ன்பமவ ளுக்கென்னில்
அவனுக்கெனில் அவளும்
சுவைமிக்க வாழ்வைத்தான்
காதல்வாழ் வென்று
சாதல் வரைக்கும்
உடையார்தம் வாழ்வில்
மடவார் பிறனை
ஆடவனும் வேறோர்
கூடும்மண மக்கள்
என்னவெனில், இல்லறத்தைச்
மக்கட் பேறு
நன்மக்கட் பேறுபற்றி
ஈண்டுக் குழந்தைகள்தாம்
வேண்டும் அளவே
சேர்க்கை ஒழித்துக்
போக்கருநோய் கொண்டால்
ஒருமித்தால் ஐயகோ!
இருநிலத்துக் கென்னநலம்
பிறர் நலம்
தலைவன் தலைவியர்கள்
அலைநீங் கியபின்
நாடலாம் என்னாமல்
பாடு படவேண்டும்
ஒருதீமை கண்டால்
எருதுமேல்ஈ மொய்த்த
சுழற்றுவதால் துன்பம்
புழுக்குமிடம் தூய்தாகிப்
காணில் நமக்கென்ன
ஆணிவேர் கல்லி
நேருற்ற துன்பமெலாம்
சேருவான் இன்பமெலாம்
வறியார்க்கொன் றீந்தால்தன்
அறியா திரான்எவனும்
வலியாரால் வாடும்
புலியாகிப் போர்தொடுக்கும்
எய்யும்கோற் புண்ணும்
உய்ய உழைத்ததனைத்
தன்னலத்தை நீத்தும்
என்றும் உழைப்பார்க்(கு)
நடப்பார் அடியில்
துடிப்பானே தொல்லுலகி
வையத்து நன்மைக்கே
செய்யும் தொழிலில்
அகலும்; அறிவில்
புகலும்அனைத் துள்ளும்
சாதலின் இன்னாத
ஏதும்அவன் சாகுங்கால்
வருங்கால் சிரிப்பான்
பொதுமக்கள் வாழ்த்தும்
வானின் உடுக்களிடை
ஊனுடம்பு தீர்ந்தாலும்
விழிதோறும் மேலாரின்
அழியாதன் றோமேலும்
'அறத்தால் வருவதே
குறித்தார்; குறிப்பறிக;
'தவம்செய்வார் தம்கருமம்
அவரே உரைத்தார்
தமைக்காக்க! தம்குடும்பம்
தமர்என்று தாமுழைக்க
இன்பம் அதுதான்
ஒன்றுமில்லை' என்ப
இன்றுவரைக்கும் பெரியோர்
சொன்னவற்றுள் ஒன்றையன்று
சாக்காடு நெடுந்தூக்கம்
சாக்காடு பேரின்பம்
தூக்கம் கெடலைத்
தூக்கத்தை இன்பமென்றீர்
சாக்காடு இன்பம்" என்றார்.
அறுசீர் விருத்தம்
தலைவி கூடத்துப் பேச்சு
மாவர சோடிவ் வாறு
கூவர சான இல்லக்
பாவர சான தன்வாய்ப்
ஆ!அரி தென்று காதால்
"பெண்கட்குக் கல்வி வேண்டும்
பெண்கட்குக் கல்வி வேண்டும்
பெண்கட்குக் கல்வி வேண்டும்
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியில் லாத பெண்கள்
புல்விளைந் திடலாம்; நல்ல
கல்வியை உடைய பெண்கள்
நல்லறி வுடைய மக்கள்
வானூர்தி செலுத்தல் வைய
ஆனஎச் செயலும் ஆண்பெண்
நானிலம் ஆட வர்கள்
போனதால் பெண்க ளுக்கு
இந்நாளில் பெண்கட் கெல்லாம்
பொன்னேபோல் ஒருகை யாலும்
இன்னொரு மலர்க்கை யாலும்
மின்னாளை வாழ்வில் என்றும்
சமைப்பதும் வீட்டு வேலை
தமக்கேஆம் என்று கூறல்
நமக்கும்அப் பணிகள் ஏற்கும்
சமைப்பது தாழ்வா? இன்பம்
உணவினை ஆக்கல் மக்கட்(கு)
பணத்தினால் அன்று; வில்வாட்
தணலினை அடுப்பில் இட்டுத்
அணித்திருந் திட்டார் உள்ளத்(து)
சமைப்பது பெண்க ளுக்குத்
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தமிழ்த்திரு நாடு தன்னில்
இமைப்போதில் நீக்க வேண்டில்
சமையலில் புதுமை
சமையலில் புதுமை வேண்டும்
சமையற்குக் "கல்வி இல்லம்"
அமைவிலாக் குடும்பத் துள்ளும்
சமையலில் திறமை வேண்டும்
கெட்டுடல் வருந்து வோர்கள்
கட்டுடல் பெற்று வாழ்வார்!
பட்டுள பாட்டி னின்று
கட்டாயம் சமைக்கும் ஆற்றல்
வறுமையும் தெரிவ துண்டோ
நறுநெய்யும் பாலும் தேனும்
கறிசமைத் திடக்கல் லாதார்
குறுகிய செலவில் இன்பம்
வீறாப்பு வாழ்வு தன்னை
சோறாக்கி கறிகள் ஆக்கிச்
சேறாக்கிக் குடித்த னத்தைத்
மாறாக்கிக் கறியை எல்லாம்
இலையினில் திறத்தால் இட்ட
கலையினில் உயர்த்தும் நாட்டைக்
நிலையினை உயர்த்தும் இந்த
தொலையாதா அயர்வு? நல்ல
விருந்து வந்தவள் தன் நிலை கூறுவாள்
என்றனள் தலைவி! அந்த
"நன்றாகச் சொன்னீர் அம்மா
'இன்றென்ன கறிதான் செய்ய?'
நின்றவர் எனையே நோக்கி
'பருப்பும் வாழைக்காய் தானும்
பொரித்திட்டேன்' என்றால், அன்னார்
'பருப்பும்நீள் முருங்கைக் காயும்
பொரிப்பாய்நீ' என்று கூறிப்
கீரைத் தண்டுக் குழம்பு
மோருந்தான் உண்டு நாளும்
யாரைத்தான் கேட்க வேண்டும்
ஊருள்ள இராட்டி னம்போல்
முறையிலோர் புதுமை இல்லை;
குறைவான உணவே உண்டு
நிறைவான வாழ்க்கை தன்னை
மறைவதே நம்ம னோரின்
சமையல்முன் னேற்ற மின்றித்
சமயமும் சாதி என்ற
அமைவுறும் செட்டி வீட்டில்
தமைஉயர் வென்பான் நாய்க்கன்;
ஒருவீட்டின் உணவை மற்றும்
பெருநாட்டில் சமையற் பாங்கில்
தெரிந்தஓர் மிளகு நீரில்
இருவீட்டில் ஒரே துவட்டல்
ஆக்கிடும் கறிகட் குள்ள
போக்கைப்போல் மாறு கொள்ளும்
தேக்காணம் என்பார் ஒன்றே!
பாழ்க்கப் பப்படம் என்பார்கள்
கல்வி
அம்மையீர் சொன்ன வண்ணம்
செம்மையிற் பொருள்ஒவ் வொன்றின்
இம்மக்கள் தமக்குள் மேலோர்
எம்மட்டில் போமோ, நன்மை
என்றனள் விருந்து வந்த
நன்றுபூ வரச நீழல்
நின்றுநா வரசன் என்னும்
சென்றுநாம் அதையும் கேட்போம்
நாவரசன் நகைமுத்து உரையாடல்
அகவல்
ஆளிழுக் கின்ற அழகிய வண்டி
இந்த வூரில் இருப்பதும், நமது
வில்லிய னூரில் இல்லா திருப்பதும்
ஏன்அக் காஎன இளையோன் கேட்டான்.
நகைமுத்து
நகைமுத் தென்பவள் நகைத்துக் கூறுவாள்:
"கல்வி தன்னிலும் செல்வந் தன்னிலும்
தொல்லுல கோர்பால் தொலையா திருந்திடும்
ஏற்றத் தாழ்வே இதற்குக் காரணம்;
இழுப்பவன் வறியவன்! ஏறினோன் செல்வன்!
இருவரும் ஒருநிலை எய்தும் நாளில்
ஆளைஆள் இழுத்தல் அகலும்; அந்நாளில்
தன்னி லோடிகள் தகுவிலங் கிழுப்பவை
என்னும் வண்டிகள் எவரையும் இழுக்கும்."
இழுப்பு வண்டி
"அழகிய வண்டி அழகிய வண்டி
நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை;
வேண்டாப் போது விடுவர் பின்புறம்!
காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்!
இதுநம் மூரில் எப்போ துவரும்?
அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோம்?"
என்று பிள்ளை இயம்பி நின்றான்.
"நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்?
பொதுமக் கள்தம் போக்கு வரவுகள்
இங்கு மிகுதி; ஏதுநம் மூரில்?
ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம்
பெருகிடில் நம்மூர்த் தெருவிலும் நுழையும்!"
என்றாள் அன்றலர் கின்றபூ முகத்தாள்.
பகட்டு
"பகட்டா ளர்கள் பலபேர் எப்போ(து)
ஏற்படு வார்கள்" என்றான் இளையோன்.
"செல்வம் இல்லார் செல்வர் போலவும்
அழகே இல்லார் அழகியர் போலவும்
காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை
ஏற்படும் நாளில் ஏற்படு வார்கள்."
என்று கூறினாள் இளநகை முகத்தினாள்.
"அந்நிலை எப்போ ததையுரை" என்றான்.
"வஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள்.
அழகிய வஞ்சமும் வேண்டாம்
பழையஊர் நன்றெனப் பகர்ந்தான் பிள்ளையே.
தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை எதிர்பார்த்தாள்
ப·றொடை வெண்பா
செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள்
பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக
வீட்டுக் குறட்டில்நின்ற நற்றலைவி வேல்விழிகள்
பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள்
ஏனின்னும் வாரா திருக்கின்றார் என்றெண்ணித்
தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது
அன்னை மகிழ்ச்சி
நின்றாள்; சிரித்தாள்; நிலை பெயர்ந்தாள்; கானத்து
மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள்.
உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர்
பிள்ளைகள் வந்தார்கள் பேச்சோடும் பாட்டோடும்!
வீட்டாரும் விருந்தினரும்
வீடு மலர்க்காடு; விருந்தினரும் வீட்டாரும்
பாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தகும்காட்சி!
எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம்
வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல்
சிற்றுணவுண் கின்றார்கள் தித்திக்கும் நீர்பருகி
முற்றத்தில் கையலம்பி முன்விரித்த பாய்நிறையச்
சென்றமர்ந்தார்! மூத்தார் அடைகாய் சிவக்கவே
மென்றிருந்தார்! நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து
மொய்த்திருந்தார்! வீட்டில் விருந்துவந்த மூத்தவரோ
"வைத்துள்ளீ ரேஅந்த மாணிக்கப் பொட்டணத்தைக்
கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது!
கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ!
பாட்டொன்று தின்னப் பழமொன்று தாரீரோ!
கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல!
வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்பா
வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா" என்றுரைக்க
மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய்
ஒத்துத் துவங்கினான் ஒன்று:
வேடப்பன்
திரவிடம் நமது நாடு-நல்ல
திரவிடம் நமது பேச்சு!
திரவிடர் நாம் என்று களித்தோம்!
திரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்!
உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிறரின்
உருவினை முழுமையும் ஒழித்தோம்!
செத்தபின் தன்புகழ் ஒன்றே
சிறந்திட வேண்டுதல் கருதி
ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும்
உயர்திர விடரின் குருதி!
மாவரசர்
வேடன் தமிழ்க்கண்ணி வீசி நமதுளமாம்
மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு
நன்றி எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி
ஒன்றுபா டென்றாள் உவந்து:
நகைமுத்து
நிலையினில் உயர வேண்டும் பெண்ணுலகு!
புலமைகொள் கீழ்நிலை தனையுலகு தாண்டும்!
என்று நகைமுத்தாள் பாடினாள்! என்ன இன்பம்
என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவி! மற்ற
இளையார் தலைக்கொன் றியம்பிடுவார், யாரும்
களையாது காதுகொடுத் தார்
தென்னை
அறுசீர் விருத்தம் நாவரசு
தலைவிரித்தாய் உடல்இளைத்தாய் ஒற்றைக்கா லால்நின்றாய் தமிழ்நாட் டார்க்குக்
குலைவிரித்துத் தேங்காயும் குளிரிளநீ ரும்கூரைப் பொருளும் தந்தாய்
கலைவிரித்த நல்லார்கள் தாம்பசித்தும், பிறர்பசியைத் தவிர்ப்ப தற்கே
இலைவிரித்துச் சோறிடுவார் என்பதற்கோர் எடுத்துக்காட் டானாய் தெங்கே!
பனை
வீட்டுப்பிள்ளை(க)
ஊர்ஏரிக் கரைதனிலே என்னிளமைப்
நீரேதும் காப்பேதும் கேளாமல்
வாராய்என் றெனைஓலை விசிறியினால்
சீராகத் தந்ததெனில், பனைபோலும்
மா
வீட்டுப்பிள்ளை(உ)
காணிக்குப் புறத்தேஓர் பதிவிட்ட
கேணித்தண் ணீர்விடுத்தேன் பின்நாளில்
மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின்
சேண்எட்டுக் கோலெடுத்தேன் கைப்பிடித்தேன்
பலா
நாவரசு
பால்மணக்கக் கிள்ளுகின்ற பச்சையிலை
வான்மணக்க உயர்ந்தகிளை அடர்ந்தபலா
போல்மணக்கும் பலாப்பழங்கள் அண்ணாந்த
மேல்மணக்கும் கிளையினிலே, நடுமணக்கும்
மாதுளை
வீட்டுப்பிள்ளை(க)
குவிப்புடைய விற்கோல்போல் புதல்எடுத்த
உவப்படையச் செய்கின்ற மாதுளையின்
சிவப்புடைய மணிபொறுக்கிச் செவ்வானின்
சுவைப்பார்கள் எடுத்துண்டால் சுறுக்கென்று
வாழை
வீட்டுப்பிள்ளை(உ)
தாயடியில் கன்றெடுத்துத் தரையூன்றி
சேயடியில் காத்திருந்தால் தெருத்திண்ணை
காயடியில் பெரும்பூவும் கறிக்கீயும்;
ஈயடித்தேன் கலந்துருட்டிப் பழத்தின்நற்
களாச் செடி
நாவரசு
முட்கலப்பும் சிற்றிலையும் கோணலுறு
உட்புகுபூ நாகங்கள் மொய்த்திருத்தல்
வெட்கமுற்று வெண்மலர்ப்பல் வெளித்தோன்ற
கட்சிறிய கனியெனினும் சுவைபெரிது
கொய்யாப் பழம்
வீட்டுப்பிள்ளை(க)
காட்டுமுயற் காதிலையும், களியானைத்
நீட்டுகிளைக் கொய்யாதன் நிரல்தங்கத்
காட்டுகின்ற போதுகொய் யும்பழம்என்
போட்டுமென்ற போதேகொய் யாப்பழமென்
அறுசீர் விருத்தம்
விருந்தினர் மக்கள் தாமும்
பொருந்திடு கனிப்பாட் டுக்கள்
மருந்துநேர் மொழிகொள் நல்ல
திருந்திய தலைவி தானும்
மாவரசர்
தலைக்கொன்று பாட எண்ணித்
கலைக்கொன்றும் கணக்குக் கொன்றும்
இலைக்கொன்றும் வைத்த மற்ற
மலைக்கின்ற போதும் அன்போ
'மலர்க்குழ லாளும் நானும்
விலைக்குள பொருள்கள் வாங்கி
தலைவரை, என்றன் அன்பைக்
அலைத்தது நெஞ்சே' என்றார்
நன்றென்று தலைவி சொன்னாள்;
இன்றென்னை உடன ழைத்துச்
என்றென்றும் உன்வ ழக்கம்
சென்றனர் பெரியார்; பையன்
வேடப்பன் தனிய றைக்குள்
கூடத்தில் தம்பி தங்கை
மாடத்தை நடையை மற்றும்
சோடித்து மணிவி ளக்கால்
நறுமலர்க் குழலாள் இன்ப
சிறுவர்பால் எழுது கோலும்
நிறைமகிழ் நெஞ்சு கொள்ள
உறுகலை அனைத்தின் மேலாம்
எண்சீர் விருத்தம்
வேடப்பன்
திறந்திருந்த சுவடியிலே வேடப் பன்தன்
இறந்திருக்கும் மங்கையரி லேனும் மற்றும்
நிறைந்திருக்கும் அழகுநகை முத்தாள் போன்றாள்
சிறந்திருக்கும் செந்தமிழ்க்கும் சிறப்பைச் செய்தாள்
காணுதற்குக் கருவியோ கயற்கண் இன்பக்
பூணுதற்கே இதழோரப் புன்ன கைதான்!
ஆணினத்தைக் கவர்கின்றாள்! நிலாமு கத்தாள்;
பேணுதற்குத் திருவுளங்கொள் வாளோ! என்றன்
அவள்மேற் காதல்
அடுக்கிதழில் நகைதோன்றும் போதில் எல்லாம்
மடுப்புனலைப் புன்செய்உழ வன்பார்த் தல்போல்
அடுத்திருக்கும் கருத்துண்டோ! யாதோ! ஐயோ!
எடுத்தடிவைப் பாள்இடையோ அசையும் வஞ்சி
பொழிகதிரை மறைந்தொளிகொள் முகிலைப் போலப்
அழகுடையாள் திருமேனி என்னே! என்னே!
குழலும்போய்த் தொழுகின்ற குரலால் பாடிக்
மழைமுகிலின் கூந்தலிலே பலம லர்கள்
புதுநூலின் முதல்ஏட்டில் கயிறு சேர்த்தும்
இதுவரைக்கும் உளஞ்செலுத்தி இருந்தான்; தந்தை
அதிர்நடையார் மாவரசும், மனைவி தானும்
எதிர்வந்தாள் "வேடப்பா" என்றாள், "அம்மா"
நகைமுத்தாள் பசியில்லை யென்று சொன்னாள்;
தொகைமுத்துக் குவித்தாலும் ஒன்றில் நெஞ்சைத்
அகத்தினரும் விருந்தினரும் அமர்ந்தி ருக்க,
முகத்தினளாய் உணவுபடைக் கின்றாள்! இங்கே
நகைமுத்து
முதலேட்டில் சிலவரிகள் படித்துத் தீர்க்க
எதில்நினைவு செலுத்தினார்? எனவி யந்தே
அதேசுவடி மேல்வைத்தாள், உற்றுப் பார்த்தாள்;
இதுவரைக்கும் யாரைநினைத் திருந்தீர்?' என்றாள்;
ஏதேதோ கேட்டிருந்தாள் வேடப் பன்பால்!
காதோடு 'நும்பெற்றோ ரிடத்தில் இந்தக்
ஓதிவிட்டார் முடிவென்றான் வேடப் பன்தான்.
தீதின்றிக் கையலம்பு வோர்கள் கேட்கத்
கைகழுவும் நினைப்பில்லை! சோற்றி லேனும்
பொய்கையிலே வீழ்ந்திட்டான்! கரைகா ணாமல்
வைகைநறும் புனலாடிக் கோடை வெப்பம்
செய்கைஇழந் தமர்ந்திட்டாள். "நாங்கள் ஊர்க்குச்
தந்தைமொழி அதிர்வேட்டால் மங்கை நொந்தாள்;
'இந்தஇருள் நேரத்தில் செல்வ தென்ன?
வந்தவர்கள் மன்னிப்பு வேண்டி னார்கள்.
வெந்தனவாம் இரண்டுள்ளம். நன்றி கூறி
பிரிந்தாள்
நூறுமுறை அவள் பார்த்தாள் அவனை! ஆளன்
பேறுதனை இழப்பாள்போல் குறட்டி னின்று
ஆறுமுறை அவள்பார்த்தாள், அவனும் பார்த்தான்!
ஏறிவிட்டாள்! ஏறிவிட்டார் விருந்தி னர்கள்!
வண்டிநகர்ந் தது; மாடு விரைந்த தங்கே!
கெண்டைவிழி யைச்செலுத்தி மறைந்தாள்! நெஞ்சைக்
தண்டமிழ்த்தேன் உண்டவர்கள் பொருளை எண்ணித்
ஒண்டொடியாள் உட்சென்றாள், நகைமுத் தாளின்
மூன்றாம் பகுதி
1. திருமணம்
வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு
வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து
ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது
மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து
சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு...
ப·றொடை வெண்பா
புதுவை மணவழகன் பொன்னின் பரிதி
எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப்
பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச்
சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி
ஓர்கையால் தூக்கி ஒருகை குடையூன்றி
ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள்.
'ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார்
வேளையடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ?
பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம்
வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர்
சின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றான
ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச்
சொல்' என்று சொல்லிநின்றான் தூய மணவழகன்.
'நல்லதத்தான்' என்று நவின்றாள் எழில் தங்கம்!
காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து
மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச்
சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி
நின்றாள், திரும்பினாள் நெஞ்சம் உருகித்தங்கம்!
கன்னலைக் கூவிக் கடிதழைத்தாள்! சின்னவனாம்
பொன்னப்பன் மேல்முகத்தைப் போட்டணைத்தாள்
........................... அன்னவர்க்குப்
பாங்காய் உடையுடுத்திப் பள்ளிக் கனுப்பிவைத்தாள்.
தாங்கா விருப்பால் தலைப்பிள்ளை வேடப்பன்
இன்னும் வரவிலையே என்றே எதிர்பார்த்தாள்.
பொன்மலைபோல் வந்திட்டான் பூரிக்கின் றாள் தங்கம்!
'பச்சைப் புலவர் பகர்ந்தவை என்'என்று
தச்சுக் கலைப்பொருளாம் தங்கம் வினவிடவே,
'நல்லபுற நானூற்றில் நான்கும், திருக்குறளில்
'கல்வி' ஒருபத்தும் கடுந்தோல் விலக்கிச்
சுளைசுளையாய், அம்மா சுவைசுவையாய் உண்டேன்.
இளையேன்நான் செந்தமிழின் இன்பத்தை என்னென்பேன்?
என்றுரைத்தான் வேடப்பன். 'என்னப்பா வேடப்பா
உன்அப்பா சொல்லியதை உற்றுக்கேள்' என்றாள்தாய்:
'சின்னானை வில்லியனூர் சென்றுநே ரிற்கண்டே
ஐந்நூறு ரூபாயை அட்டியின்றி வாங்கிவா'
என்றுபுகன் றார்தந்தை இப்போதே நீ செல்வாய்'
என்றுதன் பிள்ளைக்கு இயம்பினாள் தங்கம்.
அகமும் முகமும் அலர்ந்தவனாய், "அம்மா
மிகவும் மகிழ்ச்சி" என்று வேடப்பன் சென்றான்.
அமைய அவர்கட்கே ஆனகறி எண்ணிச்
சமையலுக்குத் தங்கம்சென் றாள்.
2. அவள் அண்டையில் அவன்
அறுசீர் விருத்தம்
தன்கடை மீத மர்ந்து
சின்னானை வணங்கி, என்ன
பின்; அவன் 'அமர்க' என்னப்
பன்மக்கள் அகன்ற பின்பு
'இளகிப்போ யிற்று நீவிர்
புளிநல்ல தாய்இ ருந்தால்
மிளகென்ன விலை கொடுப்பீர்?
களிப்பாக்கு விலைஎவ் வாறு?
'இளகிய வெல்லம் மாற்றி
புளியோகை யிருப்பி லில்லை;
மிளகுக்கு விலைஏ றிற்று;
களிப்பாக்கு நிறம்ப ழுப்புக்
'சரக்குவந் தெடுத்துப் போவீர்
இருக்கின்ற பற்றை மட்டும்
வரத்திய சரக்குக் காக
விரிக்கின்றார் கணக்கை' என்று
ஐந்நூறு ரூபாய் எண்ணி
இன்னொரு முறையும் எண்ணி
சின்னானை வணங்கி, 'அண்ணா
முன்னுற நடந்தான் அந்த
மாவர சான தந்தை,
நாவரச சான தம்பி,
பாவையும் விருந்தாய் வந்தாள்;
ஓவியம் வல்லாள்; என்றன்
என்னையே தனியி ருந்து
தன்னுளம் எனக்கீ வாள்போல்
புன்னகை புரிவாள்; யானோர்
பின்னிய இரண்டுள்ளத்தின்
வீட்டைவிட் டகலு தற்கு
பூட்டிய வண்டி தன்னில்
வாட்டிய பசிநோ யாளி
நாட்டுதல் போல்என் மேல்கண்
தலைக்குழல் மேற்செவ் வந்தி!
மலைக்கின்ற மூக்கெள் ளின்பூ!
குலுக்கென இடைகு லுங்கச்
மலர்க்காட்டை ஏற்றிச் சென்ற
என்நிலை அறிய வில்லை
தன்னிலை அறிய வில்லை
முன்நிலை வேறு நாங்கள்
நன்னிலை காண வேண்டும்
வேடப்பன் நகைமுத் தாளின்
வீடப்பு றத்தே தோன்ற
மாடப்பு றாவைக் கண்டான்
தேடக்கி டைத்த தேஎன்
பழந்தமிழ்ச் சுவடித் தேனைப்
இழந்ததன் பெருஞ்செல் வத்தை
'தழைத்தமா மரநி ழற்கீழ்
விழைந்தஉன் பெற்றோர் மற்றோர்
'தந்தையார் புதுவை சென்றார்;
குந்தியே கதைவ ளர்ப்பார்;
வந்தனர் அவர்தாம் வீட்டு
செந்தமிழ்ப் பள்ளி சென்றார்
கருமணற் கடலோ ரத்தில்
விரைந்தோடு வதுபோல் ஓட
இரும்;மணம், காற்று, நீழல்
திருமணம் எந்நாள்? நாம்,மேல்
'நகைமுத்தை விரும்பு கின்றேன்
வகைசெய்க அப்பா என்று
நிகரற்றாய் உன்பெற் றோர்பால்
'மகளுக்கு நாண மில்லை
இல்லத்துள் தாய்பு குந்தாள்;
செல்வியை அழைத்தாள்; மங்கை
வில்லினின் றம்பு போல
நல்லபிள் ளைபோல் வீட்டு
மலர்க்குழல் கண்டாள் 'ஓ!ஓ!
'நலந்தானே அப்பா அம்மா?
அலம்புக கைகால் வந்தே
இலைபோட்டா யிற்று வாவா
'தண்டலுக் காக வந்தேன்;
கண்டுபோ கத்தான் வந்தேன்;
உண்டுபோ என்கின் றீர்கள்
உண்டனன்; உண்ணக் கண்ட
'குப்பத்துப் பெருமாள் தாத்தா
எப்படிச் சென்றார்? நீயிங்
அப்படி அவர்சென் றாலும்
தப்புநீ செய்தாய்' என்று
இவ்வாறு சொல்லும் போதே
'எவ்விடம் சென்று விட்டேன்
செவ்வாழை தனில்இ ரண்டு
அவ்விரண் டகன்ற பின்னர்
உணவினை முடித்த பின்னர்
மணிஒன்றும் ஆயிற்'றென்று
'துணைக்குநான் வருவேன் தம்பி;
உணவுண்ட இளைப்புத் தீரும்
'இளைப்பாறிச் செல்க தம்பி'
ஒளிமுத்து நகையோ, ஓடி
விளங்குறு மேல் விரிப்பு,
மளமள வென்று வாரி
படுக்கையைத் திருத்தம் செய்து
இடைஇடை நகைமுத் தாளும்
சுடுமுகத் தாத்தா வந்து
கடைவிழி திறந்த பாங்கில்
3. தந்தையார் இருவருக்கும் சண்டை
எண்சீர் விருத்தம்
மணவழகன், கடையினிலே வணிக ரோடு
கணக்கெடுத்துக் கொண்டிருந்தான். அந்நே ரத்தில்
'மணவழக ரே,ஆயிரத்தைந் நூறு
பணமுழுதும் வாங்கிவரச் சொன்னார்' என்றான்;
'சீட்டேதும் தந்தாரோ? உன்னி டத்தில்
கூட்டத்தின் நடுவினிலே குறுக்கிட் டாயே
'கேட்கின்றோம் கொடுத்தபணம் எரிச்சல் என்ன?
நீட்டினான் தன்நடையைக் கருப்பண் ணன்தான்
வந்திட்டான் மாவரசன் எதிரில் நின்று
நொந்திட்டான் மணவழகன்' நொடியில் எண்ணி
தந்திட்டான்; மாவரசன் பெற்றுக் கொண்டான்;
இந்தமொழி சொன்னமண வழகன் தன்னை
'மாவரசன் தன்னைநான் பணமா கேட்டேன்
யாவரொடும் பேசிநான் இருக்கும் போதில்
நோவஉரைத் திட்டானே தீயன் என்னை
நாவால்ஓர் வசைகேட்ட தில்லை என்று
மணவழகன் வழக்கறிஞ னிடத்திற் சென்றான்
தணிவற்றுப் பதறினான்; பொய்வ ழக்குத்
இணங்கமறுத் தவனாகி நண்பர் பல்லோர்
துணைவியிடம் சொல்வதற்கு வீடு வந்தான்;
4. எதிர்பாராத இடைஞ்சல்
அகவல்
"நண்புளார் தீமை நாடினும் அதனைப்
பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார்
தாவுறும் உங்கள் தகைமையை அந்த
மாவர சாலோ மாற்ற முடியும்?
தீதுசெய் தார்க்கும் நன்மை செய்வர்
மூது ணர்ந்தவர் முனிவு செய்யார்;
அத்தான் மறப்பீர்; அகம்நோ காதீர்"
என்று தேறுதல் இயம்பினாள் தங்கம்.
மகன்வே டப்பன் வந்து சேர்ந்தான்;
தந்தை யாரிடம் சாற்று கின்றான்;
"சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய்
மணிபத் தாகிற்று மாவர சில்லம்
அருகில் இருந்ததால் அங்குச் சென்றேன்;
மலர்க்கு ழலம்மையார் வற்புறுத் தியதால்
உண்டேன்; சற்றே உறங்கினேன்; என்னுடன்
பெருமாள் தாத்தா வருவா ரானார்."
மகன்சொல் கேட்ட மணவழ கன்தான்
முகங்கன லாக "முட்டாள்! முட்டாள்!
செல்ல லாமோ தீயன் வீடு?
மதியார் வீடு மிதியார் நல்லார்!
பொல்லாப் பிள்ளை நில்லா தேஎதிர்
போபோ!" என்று புகல லானான்.
தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து
"மாவர சின்று மதிப்பிலா வகையில்
நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி;
கடைக்குப் போயிரு கண்ணே" என்றாள்;
அடக்க முடியாத் துன்பம்
படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே.
5. பகை நண்பாயிற்று
ப·றொடை வெண்பா
தாழ்வாரந் தன்னிலொரு சாய்வுநாற் காலியிலே
வாழ்வில் ஒருமாசு வந்ததென எண்ணி
மணவழகன் சாய்ந்திருந்தான். மாற்றுயர்ந்த தங்கம்
துணைவனுக்கோர் ஆறுதலும் சொல்லி அருகிருந்தாள்.
தங்கம்என்று கூவித் தடியூன்றி அப்பெருமாள்
அங்குவர லானார்; அகமகிழ்ந்தார் அவ்விருவர்.
சாய்ந்திருக்க நாற்காலி தந்தார்; பருகப்பால்
ஈந்து, நலங்கேட்டே எதிரில் அமர்ந்தார்கள்.
"வேடப்ப னோடுதான் வில்லிய னூரினின்று
வாடகை வண்டியிலே வந்தேன்; கடைத்தெருவில்
வெண்காயம் என்ன விலையென்று கேட்டுவந்தேன்
சுண்டைக்காய் வாங்கிவரச் சொன்னாளென் பெண்டாட்டி.
வில்லிய னூரில்ஓர் வேடிக்கை கண்டேன்உம்
செல்வனைப் பற்றிய செய்திஅது! சொல்லுகிறேன்:
'பத்து மணிஇருக்கும் பாவை நகைமுத்தாள்
புத்தகமும் கையுமாய் வீட்டுப் புறத்தினிலே
உள்ளதொரு மாமரத்தின் நீழலிலே உட்கார்ந்து
தெள்ளு தமிழில் செலுத்தியிருந் தாள்கருத்தை;
வேடப்பன் வந்தான் விளைந்தவற்றை என்சொல்வேன்!
'தேடக் கிடைத்தஎன் செல்வமே' என்றான்.
மறைந்துநான் கேட்டிருந்தேன் வஞ்சியின் பேச்சை!
'இறந்தேன் நான்இன்று பிறந்தேன்' எனப் புகன்றாள்
அன்பின் பெருக்கத்தை அன்னவர்பால் நான்கண்டேன்;
'என்று மணம் நடக்கும்?' என்றுகேட் டாள்பாவை.
'பெற்றோர்பால் நீநமது பேரன்பைக் கூறிமணம்
இற்றைக்கே ஈடேற ஏற்பாடு செய்'என் றாள்.
'நீதான்சொல்' என்றுரைத்தான் வேடப்பன்! நேரிழையாள்,
'ஓதுவேன். நாணமில்லா ஒண்டொடிஎன் பார்'என்றாள்.
இவ்வாறு பேசி இருந்தார்கள் அன்னவற்றை
அவ்வாறே சொல்ல அறியேன்; அதேநேரம்
வீட்டினின்று தாயழைத்தாள் மெல்லி மறைந்தாளே.
ஓட்ட மெடுத்தானே வேடப்பன் உட்சென்றான்.
'வா'என் றழைத்தாள் மலர்க்குழலி சோறிட்டாள்,
பாவையவள் வேடப்பன் பார்க்க உலவியதும்,
மெத்தையைத் தூக்கிவந்து தாழ விரித்ததுவும்,
முத்துச் சிரிப்பை முகத்தில் பரப்பியதும்
வேடப்பன் தூங்குவது போலே விழிமூடி
ஆடுமயில் வந்தால் அழகைப் பருகுவதும்,
எவ்வாறு ரைப்பேன்காண் யானோர் கவிஞனா?
இவ்வேளை இந்தநொடி ஏற்பாடு செய்திடுக!
இன்றே செயத்தக்க இன்பமணத் தைநாளைக்
கென்றால், துடிக்கும் இளமைநிலை என்னவாகும்?"
என்றார் பெருமாள். இவையனைத்தும் கேட்டிருந்த
குன்றொத்த தோளானும் தங்கக் கொடியும்
மயிர்கூச் செறிய மகிழ்ச்சிக் கடலில்
உயிர்தோயத் தங்கள் உடலை மறந்தே
கலகலென வேசிரித்தும் கைகொட்டி ஆர்த்தும்
உலவியும் ஓடியும் ஊமை எனஇருந்தும்
பேசத் தலைப்பட்டார் "எங்கள் பெரியபிள்ளை
யின்காதல் நெஞ்சினிலே வாழுகின்ற வஞ்சியைஎம்
சொத்தெலாம் தந்தேனும் தோதுசெய மாட்டோமா?
கத்தினான் மாவரசன் கண்டபடி ஏசிவிட்டான்.
என்பிள்ளை தன்மகள்மேல் எண்ணம்வைத்தான் என்னில், அவன்
பொன்னடியை என்தலைமேல் பூண மறுப்பேனா?
என்பிள்ளை உள்ளம், அவன் ஈன்றகிளிப் பிள்ளையுள்ளம்
ஒன்றானால் எங்கள் பகையும் ஒழியாதோ!"
என்றான் மணவழகன், ஏதுரைத்தாள் தங்கம்எனில்,
"இன்றேநீர் வில்லியனூர் ஏகுகதாத் தாதாத்தா!
எங்கள் மகன்கருத்தை எம்மிடம்சொன் னீர்அதுபோல்
திங்கள்முகத் தாள்கருத்தை அன்னவர்பால் செப்பி
மணத்தை விரைவில் மணமகன் வீட்டில்
பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த
உறுதிபெற்று வந்தால்எம் உள்ளம் அமையும்.
அறிவுடையீர் உம்மால்தான் ஆகும்இது" என்றாள்.
சிற்றுண வுண்டு சிவப்பேறக் காய்ச்சியபால்
பெற்றே பருகிப் பெரியதொரு வண்டியிலே
ஏறினார் தாத்தா 'இசைவார் அவர்' என்று
கூறிச்சென் றார்மகிழ்ச்சி கொண்டு.
6. மணமகன் வீட்டில் மணம்
அகவல்
"காயா பழமா கழறுக" என்றாள்.
"கனிதான்" என்று கழறினார் தாத்தா.
வண்டிவிட் டிறங்கி வந்தார் உள்ளே
தங்கம் "நடந்ததைச் சாற்றுக" என்றாள்.
"என்மேல் மாவரசுக் கெரிச்சல் இருந்ததா?
மறைந்ததா?" என்றான் மணவழ கன்தான்.
"ஒப்பி னாரா? ஒப்பவில் லையா?
செப்புக" என்று செப்பினாள் தங்கம்.
"இருந்தா ரன்றோ வீட்டார் எவரும்?
கொல்லையில் காதலர் கூடிப் பேசிய
எல்லாம் அவரிடம் இயம்பி னீரா?
மறந்தீரா?" என்றான் மணவழ கன்தான்.
"குறுக்கே பேச்சேன்? பொறுக்க வேண்டும்.
உரைக்க மாட்டேனா? உட்கா ருங்கள்"
என்றார் தாத்தா. இருவரும் அமர்ந்தார்.
"நான் கிளம்பினேன் நாலு மணிக்கே
ஐந்து மணிக்கெல்லாம் அவ்விடம் சேர்ந்தேன்.
மாவர சிருந்தான். மலர்க்குழல் இருந்தாள்.
நகைமுத் திருந்தாள். நடந்ததைச் சொன்னேன்.
"வேறே எவனையும் விரும்பேன்" என்றும்,
"வேடப் பனைத்தான் விரும்பினேன்" என்றும்,
சட்ட வட்டமாய்ச் சாற்றினாள் மங்கையும்.
"திருமண முடிவு செப்புக" என்றேன்.
ஒருபேச் சில்லை, ஒப்புக் கொண்டார்.
"மணமகன் வீட்டில் மணம்நடக் கட்டும்"
என்றேன் 'சரிதான்' என்றார் அவர்களும்.
"கருப்பண்ணன் என்பவன் கடைக்கு வந்து
வெறுப்பாய்ப் பேச வேண்டிய தில்லை.
ஆயினும் அவன்என் அன்புறு நண்பன்
நம்பலாம் அவனை, நம்ப வில்லை;
மணவழ கவனை மதிக்க வில்லை;
அதனால் என்மனம் கொதித்த துண்டு.
மணவழ கன்தன் மகனும், என்றன்
இணையிலா மகளும் இணைந்தார் என்றால்
பெற்றவர்க் கிதிலும் பேரின்ப மேது?
நாளைக் கவர்களை நான்எதிர் பார்ப்பேன்.
மணவழகு, தங்கம், மைந்தன், மக்கள்
அனைவரும் வரும்படி அறிவிக்க வேண்டும்!'
மாவரசு, மலர்க்குழல், வாயால் இப்படி
ஆவலோடு கூறினார். அறிக" என்று
பெருமாள் தாத்தா பேசி முடித்தார்.
பெரும கிழ்ச்சி! பெரும கிழ்ச்சி!
இரவெல்லாம் பயண ஏற்பாடு செய்தனர்.
விடியுமா? இரவின் இருட்டு
விடியுமா? காலை மலர்கஎன் றனரே.
7. மணமக்கள் கருத்துரைகள்
நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா
திண்ணையிலே மாவரசன் சிற்றானைக் குட்டிபோல்
கண்ணை எதிர்அனுப்பிக் காத்துக் கிடக்கின்றான்
வண்ண மலர்க்குழலி வந்திடுவாள் உட்செல்வாள்
பெண்ணாள் நகைமுத்தோ பேசா துலவினளே.
கழுத்து மணிகள் கலகலெனக் கொஞ்ச
இழுக்கும் எருதுகள் எக்களித்துத் தாவப்
பழுப்புநிற வண்டியன்றும் பச்சையன்றும் ஆக
முழுப்பளுவில் வீட்டுக்கு முன்வந்து நின்றனவே!
மணவழகன், தங்கள் மகன், சிறுவன், தாத்தா
தணியா மகிழ்ச்சி தழுவும் முகத்தால்
அணியாய் இறங்கிவர மாவர சங்கே
பணிவாய் வரவேற்கப் பாங்காய்உட் சென்றாரே.
'அம்மா வருக;என்று அன்புமலர்க் குழலும்
கைமலர் தாவக் கனிவாய் வரவேற்றாள்.
செம்மைநகை முத்தும்எதிர் சென்று 'வணக்கம்' என்றாள்.
மெய்மை, மகிழ்ச்சி, அன்பு வீடெல்லாம் ஆர்த்தனவே!
தூய்மைசெய நீரளித்துக் கூடத்தில் சொக்கட்டான்
பாய்விரித்து நல்லாவின் பாலும் பருகவைத்து
வாய்மணக்கும் வெள்ளிலைகாய் வட்டில் தனிலிட்டே
ஓய்வாய் நலம்பேசி உள்ளம் மகிழ்ந் தாரங்கே.
"வேடப்பன் உள்ளம் நகைமுத்தை வேண்டிற்றே
ஆடும் மயிலும் அவன்மேல் உயிர்வைத்தாள்.
நாடு நகரறிய நாளன்றில் இங்கிவரை
நீடூழி வாழ்க" என்றார் நெஞ்சார வேதாத்தா!
ஈன்றார் கருத்தென்ன? இன்பத் திருமணத்தை
மூன்றுநாட் பின்னே முடிக்க நினைக்கின்றேன்.
ஆன்ற பெரியோர்க் கழைப்பனுப்ப வேண்டுமன்றோ
தோன்றியஉம் எண்ணத்தைச் சொல்வீர்"என் றார்தாத்தா.
மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான்.
புகழ்ச்சியுறும் "வேடப்பன் பூவை மணத்தை
இகழ்ச்சியா செய்திடுவேன்?" என்றாள் மனைவி.
நகைப்போடு நன்றென் றுரைத்தான் மணவழகே!
அன்புநகை முத்தின் அருகில் அமர்ந்திருந்த
தன்துணைவி யானஎழில் தங்கத்தை நோக்கியே
'உன்கருத்தைச் சொல்'என் றுரைத்தான் மணவழகன்.
இன்ப நகைமுத்தும் ஏங்கிமுகம் பார்க்கையிலே;
'நானோ மறுப்பேன் நகைமுத்தே? என்மகனைத்
தேனே, உயிரென்றாய்; சேயவனும் அன்புகொண்டான்.
மானே மயிலே மருமகளே என்வீட்டு
வான நிலாவே மகிழ்"வென்றாள் தங்கமுமே!
"இன்ப நகைமுத்தே உன்கருத்தை யானறிவேன்.
என்றாலும் இங்கே இருப்பார் அறிந்திடவே
அன்பால் உரைத்திடுவாய் ஆணழகும் அப்படியே
பன்னுதல் வேண்டு"மென்று தாத்தா பகர்ந்தனரே.
"கட்டழக னைமணக்கக் காத்திருக்கின் றேனேநான்
அட்டியில்லை அட்டியில்லை ஆனால் ஒருதிட்டம்
மட்டமாய்ச் செலவிடுக எங்கள் மணமுடித்துத்
தட்டா மல்ஈக தனியில்லம்" என்றனளே.
மேலும் நகைமுத்து விண்ணப்பம் செய்கின்றாள்
"ஏலுமட்டும் எங்கள் குடித்தனத்தை யாம்பார்ப்போம்
ஏலாமை உண்டானால் என்மாமி யார்உள்ளார்!"
சேல்இரண்டு கண்ணானாள் செப்பினாள் இப்படியே!
"யானுமதை ஒப்புகிறேன்; என்கருத்தும் அன்னதுவே!
நானோ கடையினிலே நன்றிருப்பேன் அப்பா, ஏ
தேனும்ஒரு நூறுரூ பாய்மாதம் ஈந்திடட்டும்.
தேனோடை எம்வாழ்க்கை." என்றுரைத்தான் செம்மலுமே!
"மாமிகொடு மைக்கு வழியில்லை. மைத்துனர்கள்
தாமொன்று சொல்லும் தகவில்லை. தன்துணைவன்
ஏமாற்றி னான்தன் இளையவனை என்று சொல்லும்
தீமையில்லை. தக்கதென்று" செப்பிமகிழ்ந் தார்தாத்தா.
பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லைஎன்பர் நான்தருவேன்,
கண்ணை இமையிரண்டு காப்பதுபோல் என்மருகர்
பண்ணும் குடித்தனத்தை மேலிருந்து பார்த்திடுவேன்.
உண்மை" என்றான் மாவரசன்; பெற்றவளும் ஒப்பினளே!
"நகைமுத்தின் எண்ணத்தை நான்ஒப்பு கின்றேன்.
மிகஓர் 'குடும்ப விளக்கேற்றல்' நன்றே!
தகும்"என்றாள் தங்கம்! மணவழகன் தானும்
மகனுக்கு மாதமொரு நூறுதர ஒப்பினனே!
மூன்றாநாள் நன்கு மணத்தை முடிப்ப தென்றும்
ஏற்றுக்கொண்டார் எல்லோரும். சாப்பா டினிதுண்டார்.
வான்தோய்ந்த வெண்ணிலவில் வண்டி புறப்படுமுன்
தேன்சுரக்கச் "சென்று வருகின்றோம்" என்றனரே.
8. திருமண அழைப்பு
அகவல்
"விடிந்தால் திருமணம்! விண்ணின் நிலவு
வடிந்தஇன் றிரவு மணப்பெண் வருவதால்,
வாழ்த்தி நீங்கள் வரவேற் பதற்கும்,
காலை மலர்ந்ததும் கவின்மண வறையில்
மாலை யிட்ட மணமக் கள்தமை
வாழ்க என்று வாய்மலர்ந் திடவும்,
உடன்யாம் பரிந்திடும் உணவுண் ணுதற்கும்,
வந்தருள் புரிக, வந்தருள் புரிக!"
என்று, தங்கம் மணவழகு
நின்று வீடுதொறும் நவின்றனர் பணிந்தே!
9. முதல்நாள் இரவு
கட்டளைக் கலித்துறை
அன்றிர வொன்ப தடிக்க முரசம் முழங்குமணி
முன்றிலில் வாழை கமுகுதெங் கின்குலை முத்தின்ஈந்து
நன்று சிறக்க நடுப்பகல் போல விளக்கெரியப்
பொன்துகில் பூண்ட தெருமாதர் ஆடவர் போந்தனரே!
விருப்பந் தரத்தக்க வெண்துகில் கட்டி விளக்கிலகும்
தெருப்பந்தல் வாயிலிற் செந்தூக் கிலேமணித் தேர்இரண்டும்
*இருப்பங் கெனத்தங்கம் செம்மல் இவர்நின் றிருந்தபடி
வரத்தம் கைகூப்பி வருவார் தமைவர வேற்றனரே!
(*இருப்பு அங்கு எனப் பிரிக்க)
மாடப் புறாக்கள் மயில்குயில் மான்நிகர் மங்கையர்கள்
ஆடவர் பிள்ளைகள் எள்ளிட மின்றி அமர்ந்திருந்தார்.
வீடப் படித்தெருப் பந்தலில் அப்படி! மாடியின்மேல்
வேடப்பன் பார்த்துநின் றான்மங்கை யாள்வரும் வேடிக்கையே!
இசைவந் ததுபொம்பொம் என்றே! விழிகூச வந்ததொளி!
மிசைவண் ணமெருகு கண்ணாடிச் சன்னல்கள் மின்விளக்கம்
அசைகின்ற ஊசலின் முன்பின் இருக்கைகள் ஆகியதோர்
விசைவண்டி வந்தது வந்தாள் நகைமுத்து மெல்லியலே!
மாவர சன்பான மக்கள் மலர்க்குழல் மற்றவர்பின்
ஏவலர் பெட்டிகள் பட்டுப் படுக்கைகள் ஏந்திவரப்
பூவி லிருந்து பெடையன்னம் ஒன்று புறப்படல்போல்
பாவை இறங்கினள் வண்டிவிட் டேதெருப் பந்தல்முன்னே!
'வாழி மணப்பெண் நகைமுத்து நல்லபெண்! வாழிஎன்றே
ஆழி முழக்கென யாரு முழக்க, அடியெடுத்தே
யாழின் நரம்பிசை ஏழும் சிலம்பும் சிலம்ப உடன்
தோழி நடத்த நடந்தாள்இல் நோக்கிஅத் தூய்மொழியே!
வானில் துவைத்த முழுநில வேமுகம் வண்கடலின்
மீனில் துவைத்தநீள் மைவிழியாள்அவள் வேடப்பனின்
ஊனில் துவைத்தும் உயிரில் துவைத்தும்தன் வாயில்உண்ணத்
தேனில் துவைத்தநற் செவ்வித ழாள்வீடு சேர்ந்தனளே!
பாலும் பழமும்அப் பாவைக்க ளித்தனர்! பற்பலரும்
மேலும் கமழுநீர் தோளும் கமழ்மாலை வெள்ளிலைகாய்
ஏலும் படிஎய்தி ஏகினர்! வேடப்பன் இங்குமங்கும்
காலும் கடுகத் திரிவான் நகைமுத்துக் கண்படவே!
அம்மா துயின்றன ரோ'என வேடப்பன் அவ்வறைக்குள்
சும்மா வினவித் தலைநீட்ட அங்கொரு தோழி சொன்னாள்:
"எம்மா தரும்துயின் றா"ரென வே! இது பொய்ம்மைஎன்றே
செம்மா துளைஇதழ் சிந்தின ளேவெண் நகைமுத்துமே!
மூடிய கண்களும் மூடாத நெஞ்சுமாய் முன்னறைக்குள்
ஆடிய தோகை அடங்கினள்! அப்படி வேடப்பனும்
பாடிய யாழ்போல் கிடந்தனன் ஓர்புறம்! பால்இரவோ
ஓடிய தே,எதிர் உற்றது கீழ்க்கடல் ஒண்கதிரே!
10. மணவாழ்த்தும் வழியனுப்பும்
அகவல்
எழுந்தது பரிதிக் குழந்தை கடலின்
கெழுநீ லத்தில் செம்பொன் தூவி!
கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும்
மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்!
எழும்வளைந்து நெளிந்து விழும்கடல் அலையே.
அழகிய தென்பாங் காடற் கலையே!
புதிய காலையில் புதிய பரிதியின்
எதிரில் அடடா சதிர்க்கச் சேரி!
கிழக்கில் திராவிடற்குக் கிடைத்த கடல்முரசு,
முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு!
திரைகடல் முழக்கெனத் திருமண வீட்டின்
பெருங்கூட் டிசையரங்கு செய்த இசைமழை
தெருத்தொறும் இல்லந் தோறும் தென்றல்
திருத்தேர் ஏறிச் சென்று காதெலாம்
"வருக மணத்துக்" கென்று பெருகிற்று!
மணவீடு நோக்கி வந்தனர். என்னே!
அணிஅணி யாக அணியிழை மங்கைமார்
துணையோடு நன்மலர் முக்கனி சுமந்து!
நகைமுத்தை மலர்பெய்த நன்னீ ராட்டிக்
குறைவற நறும்புகை குழலுக் கூட்டி
மணக்குநெய் தடவி வாரிப்பூப் பின்னி
மணியிழை மாட்டி, எம் கண்ணாட் டிக்கு
ஏலும் சேலை எதுவென எண்ணி
நிலாமுகத் திற்கு நீலச் சேலை
நேர்த்தி ஆக்கி நிலைக்கண் ணாடி
பார்க்கச் சொன்னார்; பார்த்த நகைமுத்தோ
கண்ணாடியில்தனைக் கண்டாள்; தன்மனத்
துள்நாடி வேடனுக் கொப்பு நோக்கினாள்.
காலுக் குச்சிராய், மேலுக்குச் சட்டையடு
சேலுக்கு நிகர்விழித் தெரிவை காணத்
தென்னாட் டுச்சேர சோழபாண் டியரில்
இந்நாள் ஒருவனோ என்ன நின்றான்.
'வருக திருமண மக்கள்!' என்று
திருந்து தமிழப் பெரியார் அழைத்தனர்.
திருமணப் பந்தலின் சிறப்புறு மணவறை,
இருமண மக்களை ஏந்தித் தன்னிடை,
முழுநில வழகொழுகு முகமும், மற்றும்
எழுந்த பரிதிநேர் ஆணழகு முகமும்
இருப்பது காட்டி இறுமாப் புற்றது!
நிறைமணமன் றெலாம் நறுமணம், இன்னிசை
அறிஞர் பெண்டிர், ஆடவர் பெருங்கடல்!
உதிரிப் புதுமலர் எதிருறு மன்றின்
நிறைந்தார் கையில் நிறையத் தந்தனர்.
பெரியவர் ஒருவர், "பெண்ணே நகைமுத்து!
வேடப் பனைநீ விரும்பிய துண்டோ?"
வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?"
என்னலும், நகைமுத் தெழுந்து வணங்கி,
"வேடப்பனை நான் விரும்பிய துண்டு;
வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்" என்றாள்.
"வேடப் பாநீ மின்நகைமுத்தை
மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன
அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்"
என்னலும் வேடன் எழுந்து வணங்கி
"மின்நகை முத்தை விரும்பிய துண்டு;
வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன்" என்றான்.
மணகமள் நகைமுத்து வாழ்க வாழ்கவே!
மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே!"
என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே!
தன்மலர் மாலை பொன்மகட் கிடவும்
பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும்
ஆன திருமணம் அடைந்த இருவரும்,
வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை
மன்றினர் யார்க்கும், அன்னைதந் தையர்க்கும்
நன்றி கூறி வணக்கம் நடத்தி
நிற்றலும், "நீவிர் நீடு வாழிய!
இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க!
மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து
அறுகுபோல் வேர்பெற! குறைவில் லாத
மக்கட் பேறு மல்குக" என்று,
மிக்கு யர்ந்தார் மேலும்வாழ்த் தினரே!
அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல்
கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி
வெற்றிலை பாக்கு விரும்பி அளித்தார்.
மற்றும் ஓர்முறை 'வாழிய நன்மணம்'
என்று, வந்தவர் எழுந்த அளவில்,
எழில்மண மக்களும், ஈன்றார் தாமும்
"நன்றி ஐயா! நன்றி அம்மா!
இலைபோட்டுப் பரிமாறி எதிர்பார்த் திருக்கும்
எம்அவா முடிக்க இனிதே வருக!
உண்ண வருக, உண்ண வருக"
என்று பன்முறை இருகை ஏந்தினர்
நன்மண விருந்துக்கு நண்ணினர் அனைவரும்.
மணமகள் மணமகன் மகிழ்வொடு குந்தினர்;
துணையடு துணைவர் இணைந்திணைந்து குந்தினர்;
வரிசையாய்ப் பல்லோர் வட்டித் திருந்தனர்.
விருந்து முடித்து, விரித்த பாயில்
அமர்ந்தார்க்குச் சந்தனம் அளித்துக் கமழ்புனல்
அமையத் தெளித்தே அடைகாய் அளிக்க
மணமக் கள்தமை வாழ்த்தினர் செல்கையில்
எழில்மண மக்கள் ஈன்றோர்
வழிய னுப்பினர் வணக்கம் கூறியே.
11. சோலையிற் காதலர்
எண்சீர் விருத்தம்
நகைமுத்து வேடப்பன் மகிழ்ச்சி யோடு
மிகநல்ல மணிப்பொறியும் ஐந்த டிக்க
"வகைமிக்க அரசினரின் பூங்கா விற்கு
தகதகெனத் தனியறைக்கோர் அழகைச் செய்யும்
விசைவண்டி ஏறினார் இரண்டு பேரும்;
இசைஎழுப்பிச் சோலைக்குள் ஓடி நிற்க
அசையும்அவள் கொடியிடையை இடது கையால்
இசைவண்டு பாடுமலர் மரங்கள் புட்கள்
வளர்ப்புமயில் நாலைந்து மான்ஏ ழெட்டு
வளைகொண்டை நிலந்தோயக் குப்பைத் தீனி
விளைக்கின்ற காட்சியின்பம் நுகர்ந்தே ஆங்கோர்
ஒளிசிறக்கும் இரண்டுருவம் காணு கின்றார்;
"இரங்காதோ பெண்ணுளந்தான் இந்நே ரந்தான்
தரவேண்டும் எனக்கெஞ்சி நிற்கக் கூடும்;
சரியாக ஆறுமணி, மாலைப் போது
தெரிந்தனையோ? எனக்கேட்டான் எழில்வே டப்பன்!
12. இன்பத் துறை
எண்சீர் விருத்தம்
கட்டிலிட்டார் மெத்தை,தலை யணைகள் இட்டார்
பட்டுப்போர் வைமடித்துப் பாங்கில் வைத்தார்
தட்டுகின்ற காம்பகற்றி மலர்கள் இட்டுச்
மட்டின்றி முக்கனி,பால் பண்ணி யங்கள்
மிகச்சிறப்புச் செய்திட்ட தனிய றைக்கு
நகைத்தாடும் குழந்தைகளில் ஒருவன் கேட்டான்
"புகவேண்டாம், புதுமணப்பெண் புதுமாப் பிள்ளை
வகைசெய்து வைத்தஇடம், வாழ்வில் இன்பம்
நான்காம் பகுதி
மக்கட் பேறு
அறுசீர் விருத்தம்
"நகைமுத்து வேடப் பன்தாம்
நிகழுநாள் எல்லாம் இன்பம்
புகழ்மிக்கு வாழ்க வாழ்க!"
எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த
நகைமுத்து நல்வே டப்பன்
*மிகுசீர்த்தித் தமிழ வேந்தின்
தகுசீர்த்தித் தலைவ னான
தொகுசீர்த்தி அறநூ லின்கண்
தகுசீர்த்தித் தலைவன் போலே
*"மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது
எதற்கு எனில் வள்ளூவன் என்பது
அந் நாளில் அரசியல் அலுவலகத்தின்
தலைவனுக்குப் பெயர் என்பதைக்
குறிப்பதாகும்.
நாளெலாம் இன்ப நாளே!
தோளெலாம் இன்பத் தோளே:
கேளெலாம் கிளைஞர் எல்லாம்
தாளெலாம் தளர்தல் இன்றி
பெற்றவர் தேடி வைத்த
மற்றும்தான் தேட வேண்டும்
கற்றவன் வேடப் பன்தான்
விற்றிடும் கடையும் வைத்தான்
இனித்திட இனித்தி டத்தான்
தனித்தறம் நடாத்து தற்குத்
நினைப்பெல்லாம் இருநி னைப்பாம்:
கனிப்பேச்சுக் கிள்ளை வாழும்
மூன்றாந்தெ ருவில மைந்த
ஈன்றவர் வாழு கின்றார்.
தேன்தந்த மொழியாள் தானும்
ஈன்றவர் தாமும் வந்தே
நல்லமா வரசும், ஓர்நாள்
வில்லிய னூரி னின்று
செல்வியை மகளைப் பார்க்கத்
அல்லிப்பூ விழியாள் தங்கம்
இங்கிது கேள்விப் பட்டே
பொங்கிய மகிழ்ச்சி யாலே
செங்கதிர் கண்டு நாணும்
மங்காத சுவைநீர் காய்ச்ச
அனைவரும் அன்பால் உண்டார்.
தனியாக அழைத்துக் காதில்
நனைமலர்ப் பொன்னி ஓடி
'கனிதானா? காயா?' என்று
முத்துப்பல் காட்டிப் பொன்னி
புத்தெழில் நகைமுத் தின்பால்
பொத்தென மகிழ்ச்சி என்னும்
அத்தூய செய்தி கேட்ட
மலர்க்குழல் தன்ம ணாளன்
புலப்பட விரல்மூன் றாலே
மலைபோலும் மகிழ்ச்சி தாங்க
இலாதவர் தமிழ்ச்சீர் பெற்றார்
'நகைமுத்து நலிவு றாமல்
மிகத்தாழ்ந்து கேட்டுக் கொண்டாள்
அகத்தினில் வைத்துக் காப்பேன்
நகைமுத்துச் சுவைநீர் தந்தாள்.
மாலையாய் விட்ட தென்றும்
வேலைஆள் இல்லை என்றும்
மூலைவா ராமல் மாடு
மேலோடல் இன்றிப் பெண்ணின்
"இன்றைக்கே நம்வீட் டுக்குத்
என்றுமா வரசு கேட்டான்;
நன்றான இந்தச் செய்தி
"என்தோழ ரிடம்சொல் லத்தான்
தங்கமோ மகனை விட்டுத்
அங்குநாற் காலி ஒன்றில்
எங்கந்தச் சாவி என்றாள்?
செங்கையால் திறந்தாள் தோட்டச்
எழில்மண வழகன் வந்தான்
"விழிபுகா இருட்ட றைக்குள்
கழிவடைக் குப்பைக் குள்ளே
மொழியாயோ விடை எனக்கு?
அறையினில் அடுக்கப் பட்ட
நிறைந்திட்ட விறகைத் தள்ளி
குறுகிய இடத்தி னின்று
துறையிலே கண்டாள் பிள்ளைத்
"நகைமுத்தாள்" என்று கூறி
"துகள்போகத் துடைக்க வேண்டும்
மகிழ்ந்தனன்! எனினும், 'பிள்ளை
தொகைஏழு திங்கள் வேண்டும்
"பேரவா வளர்க்கும் என்பார்
பேரனைக் காண லான
சீருற மூன்று திங்கட்
காரிருள் தன்னில் இன்றே
எனமண வழகன் சொன்னான்
இனிதான தொட்டி லைப்போய்
தனதன்பு மணாள னுக்குச்
தனிமண வழகன் வந்து
உணவையும் மறந்து விட்டான்;
பணப்பெட்டி தனிலே வெள்ளிப்
துணிந்தனன்; அறையில் சென்றான்.
கணகண வெனத்தி றந்தான்.
அதனையும் திறந்தான் உள்ளே
முதுமையாற் சிதைந்து போன
எதிர்வந்து நின்றாள் தங்கம்.
மதிநிகர் முகத்தாள் "யானும்
நகைமுத்தாள் மூன்று திங்கள்
வகைவகை யாகப் பேசி
பகல்கண்டார். மாம னாரும்
அகல்வாளோ தங்கம்? அங்கே
"சூடேறிற் றாவெந்நீர் தான்?
வேடப்பன் சொன்னான், அன்று
கூடத்தில் இருந்த தங்கம்
வாடவே லைவாங் காதே
எனக்கூறித் தானே சென்று
மனமலர் சிறிது வாட
நனைமலர்க் குழலாள் ஆன
இனிதாகக் குளிப்ப தற்கே
"நகைமுத்து முன்போல் இல்லை
புகன்றனர் அன்னை யார். ஏன்
புகன்றனன். எனினும் தன் கைப்
புகல்என்றும் கேட்டா னில்லை
பொழுதோட, இரவு வந்து
எழுதோவி யத்தாள் அன்பால்
முழுதாவ லோடு சாவி
தொழுதோடி 'வருக' என்ற
பிள்ளையின் வரவு கண்டு
உள்ளதன் நகைமுத் தின்பால்
"கிள்ளையே! நகைமுத் தாளே!
துள்ளிப்போய் தாமே வெந்நீர்
"நகைமுத்து முன்போல் இல்லை
புகன்றனர் அன்றோ?" என்றான்
" பொன்னே அ·தென்ன?" என்று
மிக ஆவலோடு கேட்டான்.
முகநாணிக் கீழ்க்கண் ணாலே
'கருவுற்றுத் திங்கள் மூன்று
அருகோடித் தழுவிப் "பெண்ணே
இருநூறு தடவை கேட்பீர்!"
பரிமாறச் சென்றாள்! காளை
நான்சிறு பையன் அல்லேன்
தான்மூன்று திங்க ளாகக்
வான்பெற்ற நிலவைப் போல
தேன்பெற்ற வாயால் அப்பா
பெற்றதாய் மடியின் மீது
உற்றிடும்; அம்மா என்னும்;
கற்றார்போல் அக்கு ழந்தை
நற்றமிழ்ப் பால் குடிக்க
அணைத்துக்கொண் டிடுவாள் அன்னை
இணைஇதழ் குவிய உண்ணும்
அணிமேலா டையினால் மூடி
பணிகாண்பேன் வையம் பெற்ற
எனப்பல வாறு வேடன்
மனைநல்லாள் அழைக்கத் தேறி
இனிதான உணவு நாவுக்
புனைமேனி காணு கின்றான்.
அகவல்
மகள்கரு வுற்ற மகிழ்ச்சிச் செய்தியை
மாவரசு தானும் மலர்க்குழல் தானும்
வில்லிய னூரில் சொல்லா இடம்எது?
நகைமுத்துக் கருவுற்ற நல்ல செய்தியை
அறிந்தோர் அனைவரும் வந்து வந்து
தத்தம் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தந்து
சென்றார்; அவர்கள் திண்ணையில் தன்னுடன்
அதையே பேசி அமர்ந்திரா ததுதான்
மாவர சுக்கு வருத்தம் தந்தது!
தெருவிற் செல்லும் மகளிரை அழைத்துக்
"கருவுற் றாள்என் கண்ணிகர் பெண்ணாள்;
காணச் சென்றேன் காலையில்; கண்டே
உடனே திரும்பினேன்; உடல்வலிக் கின்றதே
என்ன செய்யலாம்" என்பாள் மலர்க்குழல்;
வேலைக் காரிகள் வேறெது பேசினும்
பெண்கரு வுற்ற பெருமையே பேசுவாள்.
"இந்த வூட்டில் முந்திமுந் திஒரு
பேரன் பொறக்கப் போறான். ஆமாம்
இஞ்சி மொளைக்கப் போவுது. நல்ல
எலுமிச் சம்பழம் பழுக்க இருக்குது.
நல்ல வூட்டில் எல்லாம் பொறக்கும்
குடுகுடு குடுகுடு குடுகு டுகுடும்"
என்று குடுகுடுப்பைக் காரன் இயம்பினான்!
வழக்கம் போல்அவன் வந்து சொன் னாலும்
மலர்க்குழ லுக்கும் மாவர சுக்கும்
ஏற்பட்ட மகிழ்ச்சி இயம்பவோ முடியும்?
அழுக்குப் பழந்துணி அவன்கேட்டு நின்றான்.
புதுவேட்டி தந்து, 'போய்நா டோறும்
இதுபோல் சொல்லி இதுபோல் கொள்"என்று
மாவரசு சொன்னான்; மலர்க்குழல் சொன்னாள்;
எழில்வே டப்பனை ஈன்றோர் தாமும்
நகைமுத் தாளின் நற்றந்தை தாயாரும்
கருவுற் றாள்மேல் கண்ணும் கருத்துமாய்
நாளினை மகிழ்ச்சியோடு நகர்த்தி வந்தனர்.
பாளைச் சிரிப்பினாள் பசும்பொற் பலாப்பழம்
மடியிற் சுமந்தபடி, "பத்தாம் திங்களின்"
முடிமேல் தன்மலர் அடியை வைத்தாள்.
வில்லிய னூரை விட்டுத் தன்னருஞ்
செல்வி யுடனிருந்து மலர்க்குழல் செய்யும்
உதவி உடலுக்குயிரே போன்றது!
மாவரசு நாடோறும் வந்து வந்து
நாவர சர்களின் நல்ல நூற்களும்
ஓவியத் திரட்டும், உயர்சிற் றுணவும்,
வாங்கித் தந்து, மகள்நிலை கண்டு
போவான், உள்ளத்தைப் புதுவையில் நிறுத்தி;
நீடு மணிப்பொறி ஆடுங் காய்போல்
தங்கம், தன்வீடு தன்மகன் வீடு
நாடுவாள் மீள்வாள் மணிக்குநாற் பதுமுறை.
அயலவர் நாடும் அன்னை நாடும்
இனிப்பில் இருநூறு வகைபடச் செய்த
அமிழ்தின் கட்டிகள், அரும்பொருட் பெட்டிகள்
வாங்கி வந்து மணவழ கன்தான்
"இந்தா குழந்தாய்" என்றுநகை முத்துக்கு
ஈந்து போவான், இன்னமும் வாங்கிட!
கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி நாடொறும் வருவாள்.
நகைமுத் தாளின் உடல்நிலை நாடித்
தகுமுறை கூறித் தாழ்வா ரத்தில்
இருந்தபடி இருப்பது கூடா தென்றும்
உலாவுக என்றும் உரைத்துச் செல்கையில்,
வீட்டின் வெளிப்புறத்து நின்று வேடப்பன்,
"நகைமுத் துடம்பு நன்று தானே?
கருவுயிர்ப் பதில்ஒரு குறை யிராதே?
சொல்லுக அம்மா, சொல்லுக அம்மா!"
என்று கேட்பான்; துன்பமே இராதென
நாலைந் துமுறை நவின்று செல்வாள்.
அயலகத்து மயில்நிகர் அன்புத் தோழிமார்
குயில்மொழி நகைமுத்தைக் கூடி மகிழ்ந்து
கழங்கு, பல்லாங் குழிகள் ஆடியும்
எழும்புகழ்த் திருக்குறள் இன்பம் தோய்ந்தும்
கொல்லை முல்லை மல்லிகை பறித்தும்
பறித்தவை நாரிற் பாங்குறத் தொடுத்தும்
தொடுத்தவை திருத்திய குழலிற் சூடியும்
பாடியும் கதைகள் பகர்ந்தும் நாழிகை
ஓடிடச் செய்வார் ஒவ்வொரு நாளும்;
நன்மகளான நகைமுத் துக்குப்
பிறக்க இருப்பது பெண்ணா ஆணா
என்பதை அறிய எண்ணி மலர்க்குழல்
தன்னெதிர் உற்ற தக்கார் ஒருவர்பால்
என்ன குழந்தை பிறக்கும் என்று
வீட்டு நடையில் மெல்லக் கேட்டாள்;
பெரியவர் "பெண்ணே பிறந்து விட்டால்
எங்கே போடுவீர்?" என்று கேட்டார்.
"மண்ணில் பட்டால் மாசுபடும் என்றுஎன்
கண்ணில் வைத்தே காப்பேன் ஐயா"
என்று மலர்க்குழல் இயம்பி நின்றாள்.
"ஆணே பிறந்தால் அதைஎன் செய்வீர்?"
என்று கேட்டார் இன்சொற் பெரியவர்.
"ஆணையும் அப்படி ஐயா" என்று
மலர்க்குழல் மகிழ்ந்து கூறி நின்றாள்.
"பெண்ணே ஆயினும் ஆணே ஆயினும்
பிறத்தல் உறுதி" என்றார் பெரியவர்.
இதற்குள் உள்ளே இருந்தோர் வந்தே
குறிகேட்ட மலர்க்குழல் கொள்கை மறுத்துச்
சிரித்தனர்! வீட்டினுள் சென்றார்.
வருத்தியது இடுப்புவலி நகைமுத் தையே.
எண்சீர் விருத்தம்
பறந்ததுபார் பொறிவண்டி சிட்டுப் போலப்
உறவின்முறைப் பெண்டிர்பலர் அறைவீட் டுக்குள்
நிறைந்திருந்தார் ஆடவர்கள் தெருத்திண் ணைமேல்;
பொறிவண்டி விட்டிறங்கி வீட்டுட் சென்றாள்;
பேச்சற்ற நிலையினிலே உள்ளி ருந்து
பேச்சொன்று கேட்கின்றார் ஆட வர்கள்;
கீச்சென்று குழந்தையழும் ஒலியும் கேட்டார்;
"மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர்
மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்;
மெச்சிடுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்;
பச்சிளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப்
அறுசீர் விருத்தம்
ஈரைந்து திங்க ளாக
சீரேந்து செல்வந் தன்னை
நேரேமெல் லாடை போர்த்து
ஓராங்கும் அசையா வண்ணம்
சென்றஅம் மகளிர் தம்மில்
"உன்மகள் தன்னைக் காண
ஒன்றும்சொல் லாம லேஅவ்
தன்துணை கிடக்கை கண்டான்;
இளகிய பொன்உ ருக்கின்
ஒளிபடும் பவழச் செவ்வாய்
அளிதமிழ் உயிர்பெற் றங்கே
கிளியினைக் காணப் பெற்றான்
"நகைமுத்து நலமா" என்றான்
"துகளிலா அன்பே! மிக்க
"மிகுதுன்பம் இன்பத் திற்கு
"தகாதினிப் பேசல், சற்றே
சிற்சில நாட்கள் செல்ல
வெற்பினில் எயில்சேர்ந் தாற்போல்
கற்பாரின் நிலையே யன்றிக்
அற்றைநாள் மகளும் ஆகி
பெயர்சூட்டு விழாந டத்த
அயலவர் உறவி னோர்கள்
வெயில்முகன் வேடப் பன்தன்
கயல்விழி மடவார் கூட்டம்
ஓவியப் பாயின் மீதில்
தூவிசி றிக்காற் றோடு
மூவேந்தர் காத்த இன்ப
மேவும்அவ் வவையை நோக்கி
"தோழியீர் தோழன் மாரே,
வாழிய! அழைப்பை எண்ணி
வாழிய! இந்த நன்றி
ஏழையோம் பெற்ற பெண்ணுக்கு
இவ்விழாத் தலைமை தாங்க
செவ்விதின் ஒப்பி எங்கள்
எவ்வெவர் வாழ்த்தும் நல்க!
"அவ்வாறே ஆக" என்றே
அங்குள்ள அறிவின் மூத்தோர்
"இங்குநம் நகைமுத் தம்மை
உங்களின் சார்பில் நான்தான்
"அங்ஙனே ஆக" என்றார்
அப்போது நகைமுத் தம்மை
முப்பாங்கு மக்கள் காண
கைப்புறம் குழந்தை என்னும்
ஒப்புறு தோழி மார்கள்
கரும்பட்டு மென்மயிர் போய்க்
விரும்பட்டும் என்று சின்ன
சுரும்பிட்ட கருங்கண் காட்டி
அரும்பிட்ட புருவம் காட்டி
எள்ளிளஞ் சிறிய பூவை
வள்ளச்செந் தாம ரைப்பூ
அள் இரண் டும்சி வப்பு
ஒள்ளிய மணிச்சி ரிப்பும்
அன்னையி னிடத்தி னின்று
தன்னைத்தன் கையால் வாங்கித்
"என்அன்பே இளம்பி ராட்டி"
முன்னுள்ளார் தமக்கும் காட்டி,
"வானின்று மண்ணில் வந்து
தேன்அன்று; கரும்பும் அன்று;
ஆன்அருள் பாலும் இன்றே;
ஆனபே ருலகைக் காக்க
தமிழரின் தமிழ்க்கு ழந்தை
அமையுறும் மழைபோல் நன்மை
அமிழ்தென்று பெயர் அமைப்போம்
தமிழ்வாழ்க! தமிழர் வாழ்க!"
"அமிழ்தம்மை வாழ்க!" என்றே
அமிழ்தம்மைப் பெயர்ப்பு னைந்த
எமதன்பே எனவே டப்பன்
கமழ்குழல் நகைமுத் தின்பால்
அமிழ்தம்மா எனஅ ணைத்தே
தமிழர்க்கு நன்றி கூறி
தமிழ்பாடி இசைந டத்தி
"அமிழ்தம்மை நாளும் வாழ்க",
இருகாலைச் சப்ப ளித்தே
பெருகிடத் தலையை ஏந்திப்
மருவியே தன்பாற் செப்பு
ஒருமுத்து நகைமுத் தீந்தாள்.
அமிழ்துண்ணும் குழந்தை வாயின்
கமழ்செந்தா மரைய ரும்பு
தமிழ்நலம் மனத்தால் உண்பார்
அமிழ்துண்ணும் குழந்தை கண்ணும்
உண்பது பிறகா கட்டும்
துண்ணென முகம்தி ருப்பித்
கண்மகிழ் திடும்செவ் வாயின்
உண்மையாய்த் தன்தாய் என்றே
விரிவாழைப் பூவின் கொப்பூழ்
கருவண்டு விழியால் சொல்லும்
சிரித்தொரு பாட்டுச் சொல்லித்
பொருட்சிறப் பையும்வி ளக்கும்
"மண்ணாண்ட மூவேந் தர்தம்
பெண்ணாளுக் களித்த இன்பப்
உள்நாண அழகு மிக்க
எண்ணியே அன்னை தன்'பால்'
மணிவிழி இமையால் மூடி
தணிவுறும் தமிழர் யாழ்போல்
அணியுடல் குழந்தை கண்டாள்
பணியாளர் செய்த தொட்டிற்
ப·றொடை வெண்பா
தன்மகளின் பெண்ணைத் தனிப்பெருமைப் பேர்த்திதனை
இன்ப அமிழ்தை இணையற்ற ஓவியத்தைத்
தங்கம் எடுத்துத் தலையுச்சி தான்மோந்து
மங்கா மகிழ்ச்சியினால் மார்போ டணைத்திருந்தாள்!
அங்கந்த வேளையிலே அன்பு மகள்பெற்ற
திங்கட் பிறையைச் செழுமணியைப் பேர்த்திதனைக்
காண மலர்க்குழலும் வந்தாள் கடிதினிலே!
பாட்டிமார் வந்தார் பழம்பாட்டுப் பாடிடுவார்
கேட்டு மகிழலாம் என்று கிளிப்பேச்சுத்
தோழிமார் தாழ்வாரத் தொட்டிலண்டை வந்தமர்ந்தார்.
உள்ளவர்கள் எல்லாரும் தங்கத்தின் கைப்புறத்தில்
உள்ள குழந்தை யுடன்கொஞ்ச முந்துவதைத்
தங்கம் அறிந்தாள் தனதிடத்தில் உள்ள ஒரு
பொங்கும் அமிழ்தைப் பொன்னான தொட்டிலிலே
இட்டாள் நகைமுத்தை இன்னிசையால் தாலாட்ட
விட்டாள் விளைந்த தொருபாட்டு.
தாயின் தாலாட்டு
பொன்னே மணியே புதுமலரே செந்தேனே
மின்னே கருவானில் வெண்ணிலவே கண்ணுறங்கு!
தன்னே ரிலாத தமிழே தமிழ்ப்பாட்டே
அன்னைநான்; உன்விழியில் ஐயம் ததும்புவதேன்?
என்பெற்ற அன்னையார் உன்பாட்டி இன்னவர்கள்
உன்தந்தை அன்னை உயர்பாட்டி இன்னவர்கள்!
என்னருமைத் தோழிமார் உன்தாய்மார் அல்லரோ?
கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு!
சின்னமலர்க் காலசையச் செங்கை மலர்அசைய
உன்கண் உரைப்பதென்ன என்கண்ணே கண்ணுறங்கு!
தோழிமார் தாலாட்டு
தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே அன்பே
நகைமுத்தின் பெண்ணான நன்முத்தே மானே!
தகையாளர் வையத்தில் தந்த திருவே
தொகைபோட்டு வாங்க ஒண்ணாத் தூய்அமிழ்தே கண்வளராய்!
கன்னங் கரிய களாப்பழத்தின் கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித் தட்டிலிட்டே
இன்னும் எமக்கே இனிப்பூட்டிக் கொண்டிருந்தால்
பொன்"உறக்க நாடு" புலம்பாதே கண்மணியே!
தங்கத் திருமுகத்தின் தட்டினிலே உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக் கொண்டிருந்தால்
திங்கள் முகத்துன் சிரிப்போடு தாம்கொஞ்ச
அங்"குறக்க நாட்டார்" அவாமறுத்த தாகாதோ?
செங்காந்த ளின்அரும்போ சின்னவிரல்? அவ்விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக உண்கின்றாய்!
கொங்கை அமிழ்து புளித்ததோ கூறென்றால்
தெங்கின்பா ளைச்சிரிப்புத் தேனை எமக்களித்தாய்!
பஞ்சுமெத்தைப் பட்டு பரந்த ஒரு மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி அசையாமல்
பிஞ்சுமா விண்விழியைப் பெண்ணே இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக் கண்ணுறங்காய்!
தங்கத்துப் பாட்டி தாலாட்டு
ஆட்டனத்தி யான அருமை மணாளனையே
ஓட்டப் புனற்கன்னி உள்மறைத்துக் கொண்டுசெல்லப்
போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ?
செல்வத் தமிழ்வேந்தர் போற்றும் செந்தமிழான
கல்விக் கரசி கலைச்செல்வி ஔவை
இனியும் தமிழ்காத்தே இந்நாட்டைக் காக்க
நினைத்துவந்தாள் என்னிலவள் நீதானோ என்கிளியே?
நாட்டு மறவர்குல நங்கையரைச் செந்தமிழின்
பாட்டாலே அமிழ்தொக்கப் பாடிடுவாள் நற்காக்கைப்
பாடினியார் நச்செள்ளை பார்புகழும் மூதாட்டி
கூடி உருவெடுத்தார் என்றுரைத்தால் நீதானோ?
அண்டும் தமிழ்வறுமை அண்டாது காக்கவந்த
எண்டிசையும் போற்றும் இளவெயினி நீதானோ?
தக்கபுகழ்ச் சோழன் தறுகண்மை பாடியவள்
நக்கண்ணை என்பவளும் நீதானோ நல்லவளே!
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே!
சற்றேஉன் ஆடல் தமிழ்ப்பாடல் நீநிறுத்திப்
பொற்கொடியே என்னருமைப் பொன்னேநீ கண்ணுறங்காய்!
மலர்குழல் பாட்டி தாலாட்டு
உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும் கற்கண்டும்
பச்சைஏ லப்பொடியும் பாங்காய்க் கலந்தள்ளி
இச்இச்சென உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்துக் கீடாமோ என்னருமைப் பெண்ணரசே!
தஞ்சைத் தமிழன் தரும்ஓ வியம்கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்சறிவேன்
அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப் படிவமன்றோ
முகிழாத முன்மணக்கும் முல்லை மணமும்
துகள்தீர்ந்த சந்தனத்துச் சோலை மணமும்
முகநிலவு மேலேநான் உன்உச்சி மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக் கீடாமோ?
தமிழர் தனிச்சிறப்பு யாழின் இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின் இசையும்
தமிழின் இசையும் சரியாமோ, என்றன்
அமிழ்தே, மலர்வாய்நீ அங்காப்பின் ஓசைக்கே;
இன்பத்து முக்கனியே என்னன்பே கண்ணுறங்கு
தென்பாண் டியர்மரபின் செல்வமே கண்ணுறங்காய்!
பிள்ளையைத் தூக்கும் முறை
அகவல்
நடுப்பகல் உணவுக்கு நல்வே டப்பன்
இல்லில் நுழைந்தான் "என்கண் மணியே
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி!
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் தில்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்தில் மணவாளனிடம்
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்
அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது!
கொள்அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்" என்றாள் பெற்றவள்.
"பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான்.
வேடப்ப னுக்கு விளக்குவாள் துணைவி:
"ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்தின் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை!
அம்மலர்த் தண்டே அழகிய 'மெல்லுடல்'
தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்?
தலைஉடல் இரண்டையும் ஒருங்கு தாங்கி
உலைஅமிழ்தை வறியவள் ஒருத்திதூக் கல்போல்
தவறாது தூக்குவது தலையா கியகடன்
தெரிந்ததா அத்தான்" என்றாள் தெரிவை;
"கற்றேன் கணக்கா யரேகற் றபடி
நிற்கும் படியும் நிகழ்த்துக" என்றான்.
தூக்கிக் காட்டினாள் தோகை
தூக்கினான். "சரி" எனச் சொன்னாள் துணைவியே.
தந்தையின் தவறு
அறுசீர் விருத்தம்
வேடப்பன் உணவ ருந்தி
கூடத்தில் வந்து பார்த்தான்
தேடக்கி டைத்தல் இல்லாச்
வாடப் புரிந்த தாலே
நகைமுத்து விரைந்து வந்தாள்
தகும்படி தொட்டில் தன்னில்
அகத்தினில் அன்பு கொண்டீர்
மிகத்துன்பம் அடையச் செய்தீர்;
"குழந்தைதான் தூங்கும் போது
அழுதிடும் குழந்தைக் கான
ஒழுங்கோடு குழந்தை ஓம்பல்
முழங்காதே பேச்சை வாயை
அன்புள்ள துணைவன் ஆங்கே
துன்புற்றாள் நகைமுத் தாளும்
என்பெற்ற குழந்தைக் காகத்
அன்பரைத் திருத்து தற்கும்
இப்படி நினைத்தா ளாகி
கைப்புறக் குழந்தை தன்னைத்
அப்புறம் பகலைத் தள்ளி
ஒப்புறத் துணைபு ரிந்தும்
படுக்கையின் விரிப்பு மாற்றிப்
துடைக்கின்ற துணிகள் தேடித்
விடிவி ளக்கும் திருத்தி
குடித்தபால் எடுத்தல் கண்டு
உடலினை ஒருக்க ணித்தே
தடமலர் வலக்கை தன்னைத்
இடதுகை குழந்தை மேலே
கடுகள வசைதல் இன்றிக்
தாய்மையின் ஆற்றல்
அன்றுநள் ளிரவில் வேடன்
தன்மனை தன்கு ழந்தை
"என்மனை ஒருக்க ணித்தே
சின்னக் கூடார மாக்கிச்
ஒருநூலே புரண்டா ளேனும்,
உருளையின் கீழ்ம லர்போல்
தெரியவே இல்லை இ·து
அருகிலே அமர்ந்தி ருந்தான்
மங்கையை எழுப்பு தற்கு
அங்கவள் களைந்தெ றிந்த
திங்களின் முகத்தில் போட்டான்!
இங்கினிக் குழந்தை தன்னை
மலர்கண்ணி தனில்அ விழ்ந்த
கலைத்திடக் குழந்தை மீது
மலரிதழ் தனைத் துடைத்து
தலைவனோ இதனைக் கண்டான்;
தலைவிக்கு மதிப்புச் செய்தான்;
இலைஎன்பால் குழந்தை காக்கும்
தலைமட்டும் இரண்டென் றாலும்
குலையேயாம்; உயிரும் ஒன்றே!
எனக்கென்ன தெரியும் தாய்க்கும்
மனத்திடத் தொடர்பு? மற்றும்
தனதரும் குழந்தை தானும்
தனித்துப்பே சிக்கொள் கின்றார்
ஓராண்டு
வான்பார்த்துக் கிடந்த மேனி
தேன்பார்த்த மலர்க்கை யூன்றிச்
தான்பார்க்க அங்கும் இங்கும்
மீன்பார்த்த கண்ணாள் பெண்ணாள்
பட்டுப்பா வாடை கட்டிப்
கட்டிய முல்லைக் கண்ணி
நெட்டுறச் சூட்டி, நெற்றி
விட்டனள் அமிழ்தை ஆடத்
ஓடி வா
சிந்து கண்ணி
அமிழ்தே அமிழ்தே ஓடிவா-என்
அன்பின் விளைவே ஓடிவா
தமிழின் சுவையே ஓடிவா-என்
தங்கப் பாப்பா ஓடிவா
கமழும் பூவே ஓடிவா-என்
கண்ணின் மணியே ஓடிவா
குமியும் புகழே ஓடிவா-என்
குத்து விளக்கே ஓடிவா
பச்சைக் கிளியே ஓடிவா-என்
பாடும் தும்பி ஓடிவா
அச்சுப் பெண்ணே ஓடிவா-என்
ஆடும் கொடியே ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவா-என்
விரியும் சுடரே ஓடிவா
தச்சுத் திறமை ஓடிவா-என்
தங்கப் புதையே ஓடிவா
வள்ளத் தேனே ஓடிவா-என்
வானம் பாடி ஓடிவா
வெள்ளப் பாலே ஓடிவா-என்
வீட்டு விளக்கே ஓடிவா
துள்ளும் கன்றே ஓடிவா-என்
தோகை மயிலே ஓடிவா
அள்ளும் சுளையே ஓடிவா-என்
அன்பின் கனியே ஓடிவா
முத்து நிலாவே ஓடிவா-என்
மும்மைத் தமிழே ஓடிவா
கத்தும் கடலே ஓடிவா-என்
கட்டிக் கரும்பே ஓடிவா
தொத்தும் கிளியே ஓடிவா-என்
தூண்டா விளக்கே ஓடிவா
கொத்துப் பூவே ஓடிவா-என்
குழந்தை அமிழ்தே ஓடிவா
செல்வப் பொருளே ஓடிவா-என்
செந்தா மரையே ஓடிவா
கல்விப் பொருளே ஓடிவா-என்
காவிரி ஆறே ஓடிவா
முல்லைக் கொடியே ஓடிவா-என்
மூசைத் தங்கம் ஓடிவா
அல்லிப் பூவே ஓடிவா-என்
அன்பின் அமிழ்தே ஓடிவா
தென்றற் காற்றே ஓடிவா-என்
செவ்விள நீரே ஓடிவா
குன்றாச் சுவையே ஓடிவா-என்
கொள்ளா அழகே ஓடிவா
ஒன்றா உணர்வே ஓடிவா-என்
ஓவியக் கனவே ஓடிவா
மன்றின் மணியே ஓடிவா-என்
மல்லிகை மலரே ஓடிவா
பாடும் சிட்டே ஓடிவா-என்
பருகும் சாறே ஓடிவா
நாடும் திருவே ஓடிவா-என்
நடைஓ வியமே ஓடிவா
சூடும் தாரே ஓடிவா-என்
சோலை நிழலே ஓடிவா
வாடா மலரே ஓடிவா-என்
வஞ்சிக் கொடியே ஓடிவா
தண்டை குலுங்க ஓடிவா-என்
சங்கத் தமிழே ஓடிவா
கெண்டை விழியே ஓடிவா-என்
கிள்ளை மொழியே ஓடிவா
பெண்டிர்க் கரசி ஓடிவா-என்
பேறே உயிரே ஓடிவா
ஒண்டொடியாளே ஓடிவா-என்
ஓடைப் புனலே ஓடிவா
அறுசீர் விருத்தம்
வேடப்பன் வந்தான் அங்கே
ஓடச்செய் கின்றாய் காலும்
கோடைக்குக் குளிரே 'நான் ஓர்
கூடத்தில் மண்டி போட்டான்
அப்பாக் குதிரை
சிந்துக் கண்ணி
அப்பாக் குதிரை ஆட்டக் குதிரை
அஞ்சாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தப்பாக் குதிரை தாவும் குதிரை
தளராக் குதிரை ஏய் ஏய் ஏய்
சப்பைக் குதிரை இல்லை இல்லை
தமிழக் குதிரை ஏய் ஏய் ஏய்
ஒப்பும் குதிரை ஓயாக் குதிரை
ஒற்றைக் குதிரை ஏய் ஏய் ஏய்!
பேசும் குதிரை பெருத்த குதிரை
பிழையாக் குதிரை ஏய் ஏய் ஏய்
தோசைக் குதிரை சோற்றுக் குதிரை
சோராக் குதிரை ஏய் ஏய் ஏய்
மீசைக் குதிரை வெற்றிக் குதிரை
வேட்டைக் குதிரை ஏய் ஏய் ஏய்
தேசுக் குதிரை தெற்குக் குதிரை
சேரன் குதிரை ஏய் ஏய் ஏய்!
சோறூட்டல்
அகவல்
உருக்கிய நெய்யும் பருப்பும் இட்ட
சோற்றுடன் மிளகுநீர் துளியள வூற்றிச்
சிறிய வள்ளத்தில் சேர்த்தெ டுத்துக்
குழந்தைக்குக் காக்கை காட்டி
விழுங்க வைப்பாள் மென்னகை முத்தே.
சிந்து கண்ணி
காக்கா காக்கா கண்ணாட்டி
கைப்பிள் ளைக்குச் சோறூட்டி
பாக்கியை நீஅள் ளிக்கொண்டே
பறந்து போஎன் கற்கண்டே.
ஆக்கிய சோறென் சிட்டுக்கே
அதுவா வேண்டும் எட்டிப்போ
தூக்கிக் கொண்டா போய்விடுவாய்?
சுருக்காய் வாங்கும் இன்னொருவாய்.
உன்வாய் பெரிய ஒளிவாயாம்
ஒண்டொடி வாய்தான் கிளிவாயாம்
தன்னால்உண்ணும் என்தங்கம்
தண்ணீர் குடிக்க வா அஞ்சும்?
சொன்னால் கேட்கும் என்பட்டும்
சோற்றை உண்ணும் இம் மட்டும்
இன்னும் காக்கா நெருங்கிவா
இதையும் உண்டு பறந்துபோ.
நிலாக் காட்டல்
அறுசீர் விருத்தம்
மேற்றிசை ஒளிவெள் ளத்தில்
தூற்றிய முத்துக் கொல்லை
காற்றிலோர் குளிரும் கண்டார்
ஏற்றினார் அமிழ்தைப் பெற்றார்
சிந்துக் கண்ணி
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வா வா
உலா வினாய் விண்ணில்-நீ
ஒளிபு ரிந்தாய் கண்ணில்
குலா வலாம் நாட்டில்-இனிக்
கொஞ்ச லாம்என் வீட்டில்
பலா மரம் உண்டு-நற்
பழமெ லாம்கற் கண்டு
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா
அழகெ லாம்எ னக்கே-என்
அன்பெ லாம்உ னக்கே
முழுநி லாஎன் பூவே-உன்
முத்த மொன்று தேவை
பழக லாம்இ றங்கு-நற்
பைந்த மிழுண் டிங்கு
விழியி லேஒ ளிர்ந்தாய்-என்
மெய்யி லேகு ளிர்ந்தாய்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா
வானம் நீலத் தோப்பு-நீ
மங்கா தமத் தாப்பு
கூனி மீன்கள் மின்னும்-ஒளிக்
குட்டை நீஎன் றெண்ணும்
சீனத் துப்பால் கோப்பை-நீ
சிரிப்பு முகத்தையும் சாய்ப்பை
கானல் வெளியும் குளிரும்-கண்
காண மனமும் ஒளிரும்
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா
விண்ணக் கடலில் தெப்பம்-நீ
விரித்த இலையில் அப்பம்
உண்ணக் குவித்த தளியல்-நீ
உரித்த கிழங்கின் அளியல்
பண்ணும் வெள்ளித் தட்டு-நீ
பச்ச ரிசியின் பிட்டு
வெண்பட் டான குடையே-நீ
விழுங்கி டும்பா லடையே
நிலா நிலா வாவா-ஒளி
நிறைவி ளக்கே வாவா
பேச்சு
அகவல்
மரப்பா வைகள் வைத்துவிளை யாடும்
அமிழ்தொடு நகைமுத் தமர்ந்தி ருந்தாள்;
மாவரசும் வந்தான்; மகள்வர வேற்றாள்
அமிழ்தை நோக்கி"நான் யாரம்மா?" என்றான்.
அமிழ்தம் "ஐயா" என்றாள். அதனால்
குன்றி யதுமுகம் கொதித்தது நெஞ்சம்
மாவர சுக்கு! மகளை நோக்கி
'யான் அயலானா? ஏன்என்னைத் தாத்தா
என்று சொல்ல வில்லை' என்றான்.
அதுகேட்டுத் "தாத்தா" என்றாள் அமிழ்து.
முகமும் மலர்ந்தது! மாவரசுக்(கு)
அகமும் மலர்ந்தது! நகைமுத்தும் அங்ஙனே!
தேவை
அகவல்
காலை உணவுண்டு கடைக்குப் புறப்படும்
வேடன் "என்ன வேண்டும்" என்றான்;
அமிழ்துதன் தேவையை அறிவிக் கின்றாள்;
"கோழி" "நாயிக் குட்டி" "அம்மா"
இதுகேட்டு நகைமுத் தியம்பு கின்றாள்;
"அத்தான் குழந்தை, 'அம்மா' என்றால்
என்போல் இன்னுமோர் அம்மா
அன்று கேட்டது! பொம்மை அம்மாவே."
குறளில் கோயில் இல்லை
அகவல்
நாடி முத்து வேடப் பனிடம்
"இன்றி யமையா ஒன்றுக் காகக்
கடன்பத்து ரூபாய் கொடு"வென்று கேட்டான்;
வேடன் கொடுப்பதாய் விளம்பினான்.அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
"கோவிலு காட்டுப்பா" என்று கூறினாள்.
"குறளில் கோயிலே இல்லை யம்மா"
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடி முத்து நவிலு கின்றான்:
"தில்லைக் கோயிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம்உன்னைக் கேட்டேன்.
கோயில் இல்லையா குறளில்?
ஆயில்என் பணத்துக் கில்லை அழிவே!"
சேறும் சோறும் தேன்
அகவல்
அறையில் தூங்கி யிருந்த அமிழ்து,
சிறகுவிரித் துதறிச் செங்கா லன்னம்
நடைதொடங் கியதென நடந்து, தாழ்வாரத்(து)
இடையி லிருந்த மைக்கூட்டை எடுத்து
கொல்லையில் முல்லைக் கொடியின் அடியில்
சாய்த்து நீலம் சார்ந்த சேற்றால்
சிற்றில் ஒன்று செய்து முடித்தபின்
தந்தை உண்ணும் தயிரின் சோற்றை
அங்கையால் அள்ளி ஆஆ என்றாள்!
அப்பனும் வாய்திறந் ததைவாங்கி உண்டான்;
தொடர்ந்து நடந்த திந்தத் தொண்டு,
சின்னவள் அன்னை யான திறத்தை
நகைமுத்துக் கண்டு மிகமகிழ்ந் திருந்தாள்.
சேறும் சோறும் தந்தைக்குத் தேனே!
நீலத் தயிரும் நிலாநிறத் தயிரே!
"அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்"எனச் செப்பிய
வள்ளுவர் வாய்ச்சொல் பொய்என
விள்ளுவர் உளரோ விரிநீர் உலகிலே!
அன்பு பெருகுக
அகவல்
அன்னை தங்கம் அமிழ்தொடு பேசித்
தலைக்கடை அறையில் நிலைக்கண் ணாடியின்
முன்னின்று தன்எழில் முகம்பார்த் திருந்தாள்.
தனித்துவே டப்பன் தாழ்வாரத் திருந்தான்.
இனிக்க அமிழ்தும் எதிர்வந்து நின்றாள்!
சுவரி லேதன் உருப்படம் தொங்கியது
கண்ட அமிழ்து கனிவாய் திறந்து
"இதில்நான் சின்னவள். இப்போது பெரியவள்"
என்றாள், "ஆம் ஆம்" என்றான் தந்தை!
"எப்படிப் பெரியவள் ஆனேன்" என்றாள்.
"உருப்படம் எடுக்கையில் ஓராண் டுனக்கே.
இப்போது மூன்றாண் டாயின" என்றான்.
"ஆண்டுகள் எப்படித் தாண்டும்" என்றாள்.
"நேரம் போகப் போக நேரே
ஆண்டும் போகும் அல்லவா" என்றான்.
"நேரம் போவதை நேரில் பார்க்கக்
கூடுமோ" என்று கூறினாள் அமிழ்து;
"பார்இதோ மணிப்பொறி நேரம்ஓ டுவதை
இருமுள் ஓடிக் காட்டும்" என்றான்.
"முள்ஓட வில்லையே" என்று மொழிந்தாள்.
"ஓடுவது தெரியாது ஓடுகின் றதுநாள்,
வளர்வது தெரியாது வளர்கின் றாய்நீ"
என்றுவே டப்பன் இயம்பு கின்றான்.
தங்கமும் தனது தலைமுடி நோக்குவாள்,
"நரைப்பது தெரியாது நரைக்கின் றதுமுடி"
என்று தனக்குள் இயம்புகின்றாள்.
"பழுப்பது தெரியாது பழுக்கின் றதுபழம்"
என்று கொல்லையில் இருந்து நகைமுத்தும்
பத்துத் திங்கள் நிறைந்த பலாப்பழம்*
தாங்கி நடந்து, தன்இடை நோவதாய்
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள்.
"பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்"
என்பதும் உண்மை போலும்!
அன்பு பெருகுக வைய அமைதிக்கே!
(*பலாப்பழம் - கருநிறைந்த வயிறு)
நடந்து வந்த கரும்பு
அகவல்
நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது.
மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்;
மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர்.
வேடப் பன்ஓர்பால் வீற்றிருக் கின்றான்.
எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப்
பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை
"இளஞ் சேரன்"வாஎன இருகையில் ஏந்தி
ஒருபுறம் மயிலென உலவு கின்றாள்.
புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார்
முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார்
யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே அனைவரும் எழுந்தார்.
அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை.
கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்
சின்னஞ் சிறிய செங்கதிர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்
குலுங்கு நீலாம்பரக் குள்ளச் செடியும்,
முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்
அங்கே கூடி அழகுசெய் திருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை யேந்தினர்;
நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதூக்கி 'அப்பா' என்று கனிதமிழ்க்
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்
முற்றத்தில் உட்கார வேண்டினார்
உற்று நோக்கினார் உருக்கவர் பெட்டியே!*
(*உருக்கவர் பெட்டி - காமிரா)
புகைப்படம்
அகவல்
நடுநாற் காலியில் நகைமுத்துக் கைப்புறம்
அன்பிளஞ் சேரன் அண்டையில் அமிழ்து
வேடன் முதலியோர் பீடுற அமைந்தார்.
பொருந்திய வண்ணம் புறத்தின் அழகைப்
புகைப்படம் எடுத்தே; அகத்தின்
மகிழ்ச்சியை வான்படம் எடுக்க விட்டே.
திராவிட மக்கள் வாழிய
அகவல்
அமிழ்து சரியாய் ஆறாண் டடைந்தாள்;
தமிழ்தரும் தனித்தமிழ்ப் பள்ளி சென்றே
அதோவரு கின்றாள் அங்கைச் சுவடியோடு;
வேடன் நகைமுத்து வீட்டில் அப்போதில்
இளஞ்சே ரனைநீ யார்என்று கேட்டுப்
பதிலை எதிர்பார்த் திருந்தார். அவனோ
தன்மார்பு காட்டி 'நான் தம்பி' என்றான்.
"தமிழன் என்றுநீ சாற்றடா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்.
வாழிய தமிழ மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!
ஐந்தாம் பகுதி
முதியோர் காதல்
அறுசீர் விருத்தம்
மூத்த பிள்ளை முதியவரோடு
வேடப்பன் தம்பி யான
வேடப்பன் வாழ்ந் திருந்த
வேடப்ப னோ,தன் தந்தை
பீடுற வாழு கின்றான்.
முதியோருக்கு மருமகள் தொண்டு
வேடப்பன் மனைவி யான
வேடப்பன் தந்தை தாய்க்கு
வாடுதல் சிறிதும் இன்றி
ஆடிய பம்ப ரங்கள்
தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்
தலைக்கடை அறைக்குள் அந்தத்
இலக்கியம் படிப்பார்! இன்பத்
உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து)
பலஆய்வார்; துணைவர் கேட்பார்;
மணவழகர் உடல்நிலை
மணவழ கர்க்கு முன்போல்
துணைவிழி, ஒளியு ம் குன்றக்
பணையுடல், சருகு! வாயிற்
உணவெலாம்! பாலின் கஞ்சி;
தங்கத்தம்மையார் உடல்நிலை
நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
முன்னிலா முகில்உண் டாற்போல்
அன்புடல் அறத்தால் தோய்ந்த
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்
இருபெரு முதியோர் தம்மைத்
பெரும்பேறு பெற்ற தன்றோ!
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
வருவார்கள் அளவ ளாவி
இரு முதியோர் நிரம்பிய உள்ளம்
மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
எம்தக்க கடன்மு டித்தோம்
முந்துறச் சுற்றத் தார்க்கும்
இந்தநாள் வரைக்கும் வாய்மை
நாட்டுக்கு நலம் செய்தோம்
இந்நாட்டின் நலனுக் காக
எந்நாளும் பிறர்க்குத் தீமை
சின்னதோர் நன்று செய்தார்
இன்னிசை பாடும் அன்னார்
முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்
விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
இதற்குமுன் இளமை என்ப
கதையாகிக் கனவாய்ப் போகும்
முதியோளே வாழு கின்றாள்
இருக்கின்றாள் அது எனக்கின்பம்
புதுமலர் அல்ல; காய்ந்த
சதிராடும் நடையாள் அல்லள்
மதியல்ல முகம்அ வட்கு
எதுஎனக் கின்பம் நல்கும்?
நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்
இனிக்கின்ற தமிழை அன்னாள்
தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள்
எனைக்கண்டும், என்னைத் தொட்டும்
நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்;
அன்புள்ளம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்
என்பும்நற் றோலும் வற்ற,
தன்புது மேனி, காலத்
என்முது விழிகா ணற்கும்
அன்புள்ளம் காணு கின்றேன்!
பேரர் அம்மாயி என்றழைப்பர்
அது கேட்பேன் இன்பம் செய்யும்
செம்மா துளைபி ளந்து
அம்மாது களிக்கச் செய்வாள்
அம்மணி நகைப்பும் கேளேன்
"அம்மாயீ" என்பார்! கேட்பேன்
அன்னை என்றழைப்பர் மக்கள்
இன்புறும் என்றன் நெஞ்சம்
இன்னிழை பூண்டி ருப்பாள்
நன்மொழி ஒன்று சொல்வாள்
அன்னவை அந்நாள்! இந்நாள்
'அன்னாய்' என் றழைப்பார் மக்கள்
அவள் உள்ள உலகம்
எனக்கு உவப்பூட்டும்
உயிர்ப்பினை நிலைநி றுத்தும்
செயிர்ப்பற நீத்தார்* செய்வார்;
முயற்சியிற் காப்பார் மன்னர்.
உயிர்வாழ்வாள் ஆத லற்றான்
(*நீத்தார் - துறந்தார்)
அவர் வாழ்வது
அவள்மேல் வைத்த காதல்
வாழாது வாழ்ந்து மூத்த
ஆழாழிப் புனல்அ சைவை,
வீழுற அதனில் வீழ்த்தும்
காழுற மனத்தில் வைத்த
என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான்
காம்பரிந் திட்ட பூவைக்
பாம்புரி போலும் மேன்மைப்
தீம்பாலைப் பருகி அன்பன்
மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச
நெஞ்சக் காட்டில் உலவும் மான்
பாங்குற மணியும் பொன்னும்
ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில்
ஏங்குமா றில்லை இன்றும்
நீங்காமான் போல்என் நெஞ்சக்
என் நெஞ்சில் தேன்மழை அவன்
மெய்யுற வாய்சு வைக்க
வெய்யசந் தனத்தோள் மோப்ப,
ஐயன்பால் புலன்கள் ஐந்தால்
பெய்கின்றான் என்நெஞ் சத்தில்
அவனைச் சுமக்க மனம் ஓயாது
அறம்செய்த கையும் ஓயும்
புறம்போன காலும் ஓயும்!
திறம்கேட்ட காதும் ஓயும்!
மறவனைச் சுமக்கும் என்றன்
அயலவன் கண்படாமல் காத்து வந்தேன்
வெயில்பட்டால் உருகிப் போகும்
பெயும்மழை பட்ட போதே
புயல்பட்டால் நிலைகொள் ளாத
அயலவள் கண்பட் டால்சீர்
தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன்
தொப்பென்ற ஓசை கேட்டால்
உப்பொன்று குறைந்தால் உண்ணல்
ஒப்பெனில் ஒப்பா விட்டால்
தப்பொன்றும் இன்றி என்றன்
எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி
தற்காத்துத் தற்கொண் டானைத்
சொற்காத்துச் சோர்வி லாளே
முற்சொன்ன படியே என்றன்
எத்தீமை மனக்கு றைச்சல்
எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு
அகவல்
பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா
என்று பேரன் ஈய வந்தான்.
தம்பியே உன்றன் தாத்தா வுக்குக்
கொடுபோ! என்று கூறிக்
கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே!
பொரிமாத் தந்தார் உண்டாள்
நாணிப்போனார் தம்மிடம்
வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும்,
உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும்
மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க்
கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல்
துணையடு தம்,தலை யணைக்கீழ் வைத்த
பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி
எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே
நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது
மருமகள் நகைமுத்து வந்து, "மாமா
என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்?
என்னிடம் கூறினால் யான்செய் யேனா?"
என்றாள். பொரிமா இடையில் மறைத்தும்
தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும்
ஒன்று மில்லை ஒன்று மில்லை
என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்!
மருகி போனாள். கிழவர் துணைவியின்
அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி
உண்ணென்று வேண்டி நின்றார்!
உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே!
அவள் தனிச்செல்ல
மணவழகர் பொறார்
தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை
மணவழகு நோக்க மனது பொறாராய்
மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன்
துணைவிக்குத் துணைசெயக் கண்டால்
தணிவார் தமது தணியா நெஞ்சமே.
அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம்
மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால்
அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத்
தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை
உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள்
பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே.
முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்
ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி
நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம்
மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்;
செம்பில் எண்ணெயும் சீயக் காயும்
ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன்.
"உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை
எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார்.
"நானே அப்பணி நடத்துவேன்" என்றேன்.
"மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க்
கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும்
களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார்.
அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன்.
பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே
எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய்
தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி
சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே
என்றன் மாமியார், "என்னன்பு மகனே,
ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை
உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார்.
அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை
எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள்.
ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று
இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார்.
அப்படி யாஎன் றன்புறு மாமியார்
இப்புறம் திரும்பி எதிரில் நோக்க,
முக்கா டிட்டே முகம்மறைத் தபடி
சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத்
"தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே
இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி
அகலும் போது முக்கா டகன்றது.
தங்கமே பணிச்சி என்பதை
அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே!
மணிமொழியாரிடம் மணவழகர்
மனத்தில் மாசு வராமையே அறம்எனும்
வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்;
அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக
இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்;
அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார்
வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த
ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன்.
அதுதான் மணமென அறிஞர் கூடிப்
புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே.
இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என்
குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்?
என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள்
நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்;
நவையறு கல்வியால் நன்மக் கள்தமை
அவையினில் முதன்மை அடையச் செய்தேன்;
அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன்.
நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால்
நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம்
இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ?
எய்தவே இன்பம் ஏகலும் மீளலும்
அடையும் அன்றோ? அவ்வா றின்றி
அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள்
நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!"
எனமண வழகர் இயம்பிய அளவில்,
"இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள்
உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!"
எனமணி மொழியார் இனிது கேட்டார்.
நன்றென அழகர் நவில லானார்:
இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி
"படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும்
இருந்த நண்பர் பிரிந்து போகவே,
என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன்.
நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள்.
தனிமையை நெஞ்சு தாங்க வில்லை.
தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன்
இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர
என்னை அனுப்பினாள் என்றன் தலைவி
என்றாள் தோழி என்னெதிர் வந்து!
போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும்
வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி
ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு
கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே
குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன்.
"இறக்கும் நேரம்" என்றாள் வந்து!
"வாழும் நேரமோ இங்கு மட்டும்?"
என்றேன். சென்றாள். உடனே என்றன்
இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள்.
"அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை
முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள்.
"தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி"
என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி
"தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்;
பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?"
என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன்.
"அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால்
தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை
அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள்
கொழுந னோடு கொஞ்சினாள் என்று
வையம் இகழுமே" என்று, வஞ்சி
தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று
கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச்
சமையல் முடித்துத் தமிழோ
அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே!
மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார்
"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று
மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம்
என்றும் மக்களின் எண்ணம் பலவாம்;
எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும்
ஆகும். அதனால், அகத்தின் நிலைமை
நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும்.
இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற
ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர்.
இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்!
"நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே
வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்;
அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்;
"செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்!
சேறும் பூசித் திரும்பலும் இல்லை.
பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை.
தீமையில் லாவிடம் இன்பம் திகழும்,
என்ன என்னிடம் மீதி என்றால்.
ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம்.
அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால்
இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்;
'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக.
என்றன் அன்புக் குரியவர் எவரெனில்
மனைவி, மக்கள், பேரர், உறவினர்.
ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில்
இருப்பவள், என்மேல் அன்புவைத்(து)
இருப்பவள்" என்றார் மணவ ழகரே
மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார்
அறுசீர் விருத்தம்
சேவல்கூ விற்று; வானம்
மேவிய அழகர் கண்கள்
தூவிழி மலர்ந்த! ஆங்கே
"பாவையே தூக்கப் பொய்கை
அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள்
குடித்தோமே பாலின் கஞ்சி;
படித்தோமே, அவற்றி னுக்கு
முடித்தோமே! மொணமொ ணென்று
குறித்தது துயின்றேன்;இப்போ(து)
தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர்
நிறையாண்டு நூறும் பெற்ற
குறைவற்ற மகிழ்ச்சி யாலே
நிறுத்தினோம் நெடிய பேச்சை
குறித்தது துயின்றேன் சேவல்
கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம்
புதுக்காலை; குளிர்ந்த காலைப்
இதுபேசும் பேறு பெற்றேன்
எதிர்வந்த அமிழ்தே, அன்பே
அதோ நகைமுத்து வந்தாள்
நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன?
எண்சீர் விருத்தம்
மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்;
"இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே
சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார்.
கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும்,
நன்மனைவியுடையார் எல்லாம் உடையார்
இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்
நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும்
அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்;
கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்!
உலக அமைப்புக்கு இலேசு வழி
இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்
அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம்
மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின்
மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால்
துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர்
பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை
உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்?
என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட
நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்
என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ,
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்
தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு
"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை;
மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை;
செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது?
துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச்
இன்புறும் இரண்டு மனப்பறவைகள்
"வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும்
தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம்
ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம்
சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையன்று பற்றிச்
இருமனம் இரு மயில்கள்;
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு
"அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை
திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்;
பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்!
பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!"
அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும்
அறுசீர் விருத்தம்
மாநில மக்கள் எல்லாம்
ஏனின்னும் தூங்க வில்லை?
கூனல்வில் போலே மெய்யும்
ஆனதோ மணிபத் தென்றாள்
அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள்
"அவன்துயின் றானோ?" என்னும்
கவலைகொள் வாளை எங்கும்
துவள்கின்ற மெய்யால் தன்கைத்
தவழ்கின்றாள் தன்ம ணாளன்
ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள்
"வருகின்றா யோடி தங்கம்
சருகொன்று காற்றால் வந்து
பெரியாளும் பெரியான் அண்டைத்
அருகரு கிருவர்; மிக்க
இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை
ஒளிதரும் அறைவி ளக்கும்!
வெளியினை இருளும் கௌவும்
எளிதாகத் தென்றல் வீசும்
களித்தன மனம்இ ரண்டும்
மனவுலகில் இருவர் பேச்சுக்கள்
இருமனம் அறிவு வானில்
"பெரியோளே என்நி னைப்பால்
"உரியானே, எனையே எண்ணி
"பெருந்தொல்லை தூக்க மின்மை"
என் நினைவைவிட்டுத் தூங்குக
அரைநாளின் தூக்க மேஇவ்
ஒருநாளின் முழுதும் தூங்கல்
"அரிவையே என்றன் நெஞ்சை
"உரியானே என்ம னத்தைப்
நெடிய தூக்கம்
நீடிய இன்பம்
தூங்கினார் கனவும் அற்ற
ஏங்கினார் விழித்த தாலே!
தூங்குவோம்! நிலைத்த இன்பம்
தூங்குகின் றார்நல் லின்பம்
முற்றும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home